Tuesday, October 7, 2008

தேசம், ஞானம், கல்வி, ஈசன், பூசையெல்லாம்......

பராசக்தி (1952) சிவாஜி க‌ணேச‌ன், க‌லைஞ‌ர்
கூட்ட‌ணியில் ஒரு புதிய‌ திருப்புமுனையை
ப‌டைத்த‌ அருமையான‌ ப‌ட‌ம். (என‌து விருப்ப‌
ப‌ட‌ங்க‌ளில் / பாட‌ல்க‌ளில் ஒன்று) ;
அதில் வ‌ரும் ஒரு சூப்ப‌ர் பாட‌ல்.

எழுதியவர் : உடுமலை நாராயண கவி

தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்
காசுமுன் செல்லாதடி - குதம்பாய்
காசு முன் செல்லாதடி.
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே - குதம்பாய்
காசுக்குப் பின்னாலே.

சாட்சியான பணம் கைவிட்டுப் போனபின்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி - குதம்பாய்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி.
பைபையாய் பொன் கொண்டோர்
பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய் போகுமடி - குதம்பாய்
மெய் மெய்யாய் போகுமடி.

நல்லவரானாலும் இல்லாதவரை
நாடு மதிக்காது - குதம்பாய்
நாடு மதிக்காது.

கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே - குதம்பாய்
வெள்ளிப் பணமடியே

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே - காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே

உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே

முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பிணத்தைக்
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டிமேலே கண் வையடா தாண்டவக்கோனே

---------------------------------

இது "பணம்" படத்தில் வந்தது.

அண்ணா , என்.எஸ்.கே. போன்றவர்களுக்கு அன்று
ஆஸ்தான கவிபோல் விளங்கிய அருமையான கவிஞர்
உடுமலை நாராயணகவி எழுதியது :

எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்
எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

உல‌க‌ம் செழிக்க‌ உத‌வும் ப‌ண‌த்தை எங்கே தேடுவேன்
அரசன் முதல் ஆண்டியும் ஆசை படும் இந்த பணத்தை
எங்கே தேடுவேன், பணத்தை எங்கே தேடுவேன்
கருப்பு மார்கெட்டில் கலந்து கொண்டாயோ
கஞ்சன் கைகளில் சிக்கிகொண்டாயோ
கிண்டிரேஸில் சிக்கி கிருகிருத்தாயோ
அண்டின பேர்களை ரெண்டும் செய்யும்
பணத்தை ப‌ண‌த்தை எங்கேதேடுவேண்
எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

பூமிக்குள் புதைந்து புதைய‌லானாயோ......
பொன்ந‌கையாய் பெண்மேல் தொங்குகின்றாயோ
சாமிக‌ள் அடிக‌ளில் ச‌ர‌ண்புகுந்தாயோ
ச‌ன்யாசி கோல‌த்தோடு உல‌வுகின்றாயோ
ப‌ண‌த்தை எங்கே தேடுவேன்
எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

திருப்ப‌தி உண்டிய‌லில் சேர்ந்துவிட்டாயோ
திருவ‌ன்னாம‌லை குகைபுகுந்தாயோ
இரும்பு பெட்டிக‌ளில் இருக்கின்றாயோ
இர‌க்க‌முள்ள‌வ‌ரிட‌ம் இல்ல‌த‌ப‌ண‌மே
உன்னை என்கே தேடுவேன்
தேர்ச‌லில் சேர்ந்து தேய்ந்து போனாயோ
தேக‌ சுக‌த்திற்க்காக‌ ஊட்டி சென்றாயோ

சுவ‌ற்றிக்குள் த‌ங்க‌மாய் ப‌ங்க்குவிட்டாயொ

சூட‌ம் சாம்பிரானியாய் க‌ர‌ந்துவிட்டாயோ

உல‌க‌ம் செழிக்க‌ உத‌வும் ப‌ண‌மே உன்னை எங்கே தேடுவேன்

எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்
எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

Friday, October 3, 2008

இந்திரா காந்தியின் கொடுங்கோலாட்சி (அவசரகாலம் / MISA )

1975 ஜூன் மாதம் 25ஆம் தேதி, இந்திய பிரதமர்
இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்து
நாட்டில் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவ‌குத்தார்.
அனைத்து அடிப்படை உரிமைகளும் ரத்து
செய்யப்பட்டன. எதிர்கட்சிகள் தடை செய்யப்பட்டன ;
தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்ட்டு ,
விசாரணையின்றி சிறையில் தள்ளப்பட்டனர்.
பலரும் தலைமறைவாகினர். பத்திரிக்கைகள்
முடக்கப்பட்டன. கடுமையான தனிக்கை முறை
உருவானது.

இந்த கொடுங்கோலாட்சி 1977வரை தொடர்ந்த
வரலாறு பற்று பலருக்கும் தெரியாது.

http://en.wikipedia.org/wiki/Indian_Emergency

வலது கம்யுனிஸ்ட்கள் அடித்த ஜால்ரா சொல்லி
மாளாது. இந்திராதான் இந்தியா என்று கவியரங்கங்கள்
நடத்தினர்.

இருபது அம்ச திட்டம் என்ற பாடல் சதா வானொலியில் ஒலித்துக்கொண்டிருக்கும்.
ரயில்கள் சரியான நேரத்திற்கு
ஓடின. அரசு ஊழியர்களும் அவர்கள் சங்கங்களும் கப்சிப்.

திரைப்பட தணிக்கை குழு அடித்த லூட்டி மாளாது. மது
குடிப்பது , மற்றும் வன்முறை சண்டைக்காட்சிகள் வெட்டி வீசப்பட்டன.
'கிச்சா குர்சி கா' என்ற திரைப்படம் சஞ்சய்
காந்தி குழுவினரால் நெகடிவ்வோடு எரிக்கப்பட்டது.
பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டன. துக்ளக் போன்ற பத்திரிகைகள் பல
பக்கங்கள் அச்சிடாமலேயே வெளி வந்தன...அவ்வளவு சென்சார்.

புரட்சிகர சிந்தனை கொண்ட மாணவர்கள் வேட்டையாடப் பட்டனர். கேரளாவில் ராஜன்
கொலை வழக்கு பிரசித்தம்
பெற்றது. காவல்துறை எவரையும் பிடித்து சித்திரவதை
செய்யும் அதிகாரம் கொண்டிருந்தது.

பெரும் தலைவர்கள் பலர் தலைமறைவாகவும்
சிறையிலும் காலத்தை கழிக்க வேண்டியிருந்தது.....

அவசர நிலை காலத்தின் பெரும் சக்தியாக சஞ்சய்
காந்தி விளங்கினார். குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை நிறைவேற்றுகிறேன்
என்று சொல்லி குறி வைத்து ஒரு குறிப்பிட்ட பிரிவினரை பிடித்து கட்டாய
கருத்தடை
(நஸ்பந்தி) செய்தார், தில்லி துர்க்மான் கேட் பகுதியில்
இருந்த ஆயிரக்கணக்கான குடிசைகளை புல்டோசர்
கொண்டு இடித்து தள்ளினார்.

கல்லூரி விடுதிகள் கடும் கண்காணிப்புக்கு ஆயின.
Q Branch அதிகாரிகள் எந்த மாணவனையும் பிடித்து
இழுத்து சென்றனர். காங்கிரஸ் மாணவர்கள்
ஆள்காட்டிகளாக திகழ்ந்தனர்.

ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதிகளில் அப்போதைய
ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுக்கு தனி இடம்
உண்டு. அவர் பாத் டப்பில் படுத்துக்கொண்டு
கையெழுத்திடும் அபு அப்ரகாமின் கேலி சித்திரம்
படு பிரசித்தம்.

ஆர்.எஸ்.எஸ். உட்பட பல இயக்கங்கள் தடை
செய்யப்பட்டன.

அரசியலில் அப்போது அதிக ஆர்வம் காட்டாமல்
இருந்த ஜெயபிரகாஷ் நாராயணன் எதிர்ப்பு அலைக்கு
தலைமை தாங்கினார். ஜார்ஜ் பெர்னாண்டஸ்
போன்றவர்களையும் குறிப்பிட்டு சொல்லலாம்.

தி.மு.கவின் களப்பலி சிட்டிபாபு. அப்போது உள்ளே
போனவர்கள் எல்லாம் பின்னர் பெயருடன் 'மிசா' என்ற பட்டத்தையும்
சேர்த்துக்கொண்டனர். கைம்பெண்
மறுவாழ்வு திட்டதிற்க்கு நான் தயார் இந்திரா தயாரா
என கேட்ட ஸ்டாலினின் விலா எலும்பு முறிக்க
பட்ட காலம்.

'Be Indian, Buy Indian' என்ற அரசின் முழக்கத்திற்கு பயந்து அயல்நாட்டு
வாட்ச் கட்டினவன் எல்லாம் அதை அவிழ்த்து பாக்கெட்டில் போட்டு கொண்டு
திரிந்த காலம்.....

Monday, September 29, 2008

இஃப்தார் விருந்தும், அரசியல்வாதிகளும்

ரம்லான் நோன்பை தினமும் முடிக்க சாய்ங்கால வேளையில் இஸ்லாமிய அன்பர்கள்
நோன்பு கஞ்சி குடித்து முடிப்பது வழக்கம். சூரியோதயத்திற்க்கு முன்பு
துவங்கும் இந்த விரதம், மாலை வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட பருக கூடாது
என்பது விதி.
என‌து இஸ்லாமிய‌ ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் எச்சிலைக் கூட‌ விழுங்காம‌ல் துப்பிவிடுவார்.

விர‌த‌ம் ஜீரண‌ உருப்புக‌ளுக்கு ஓய்வு அளிப்ப‌த‌ற்க்காக‌ அனைத்து
ம‌த‌ங்க‌ளிலும் எதோ ஒரு பாணியில் உருவாக்க‌ப்ப‌ட்ட‌து. இஸ்லாமிய‌
ர‌ம‌லான் நோன்பு ஒரு மாத‌ம் வ‌ரை தின‌மும் க‌டைபிடிக்க‌ப் ப‌டுகிற‌து.
ஏழைகள், பட்டினியால் கஸ்டப்படுவதை அனைவரும் அனுபவத்தில் உணர்ச் செயவதும்
ஒரு நோக்கம் என்று அந்த நண்பர் கூறினார்.

கடந்த 25 ஆண்டுகளில் இந்த இஃப்தார் விருந்தில் அரசியல் புகுந்து விட்டது.
பெரும் பாலான அரசியல் கட்சி தலைவர்கள், இதில் கலந்து கொண்டு மத
நல்லினக்தையும் அப்படியே இஸ்லாமிய ஓட்டு வங்கிகளையும் வளர்க்க ஒரு
ஸ்டண்ட் இது. பெரிய தவறில்லை இது.

எமது கேள்வி : கடும் விரதம் இருக்கும் இஸ்லாமிய நண்பர்கள் விரதம் முடிக்க
நோன்பு கஞ்சி அருந்துவது சரி. ஆனால் காலை, மதியம் மூக்கு பிடிக்க
சாப்பிட்டு, பிறகு பீடா போட்டுக்கொண்ட அரசியல் தலைவர்கள், மாலையில் இந்த
விருந்தில் கலந்து, உண்மையில் நோன்பு இருப்பவர்க்ளோடு சேர்ந்து கஞ்சி
குடிப்பது தமாஸா இல்லை ?

இது ப‌ற்றி என்ன‌ சொல்வ‌து ?

Monday, September 22, 2008

பாரதியின் 'ஆரியர்' பற்றிய கருத்துக்கள் - ஒரு விவாதம்

பாரதியின் 'ஆரியர்' பற்றிய கருத்துக்கள் அன்றைய
காலகட்டத்தை வைத்துத்தான் எடை போட வேண்டும்.
ஆரியன் என்றால் யாரை எதை குறிப்பிடுகிறார் ?
திராவிடன் எனற பிரோயகம் இல்லையே ? அப்ப
ஆரியர் என்றால் பார்பனர் என்று அர்த்ததில்
பிர்யோகித்தாரா அல்லது பொதுவாக இந்தியர்களை
குறிக்க அந்த சொல்லா ? அன்று ஆரியன் என்ற சொல் 'பொலிடிக்கலி அன்கரக்க்ட்'
ஆகாமல் சகஜமாக
இருந்த்து.

பார்பனர்களின் இயல்புகளையும் அவர் கண்டித்துள்ளார்.
அதனால் பார்பனியவாதி அவர் என்று முடிவு கட்டுவது
சரியல்ல. ஜாதி பேதங்களை வெறுத்தவர். தாழ்தப்பட்ட
மக்களிடம் அன்பு கொண்டவர்.

அவரிடம் நெருங்கி பழகி, அவரின் அனைத்து
எழுத்துக்களையும் படித்தவர் பாரதிதாசன் எனப்படும் கனகசுப்புரத்தினம்.
புரட்சி கவிஞர் என்று
பகுத்தறிவாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் அவர்
ஏன் தன் பெயரை 'பாரதிதாசன்' என்று மாற்றிக்
கொண்டார் ? அவர் பாரதியோடு நெறுங்கி பழகியவர்.
பாரதியின் உண்மையான குண நலன்களை உணர்ந்தவர். பாரதியின் நல்லியல்புகள்,
சாதி மதம் கடந்த பார்வைகள்
மற்றும் அன்பை புரிந்தவர் / நேரில அறிந்தவர்.
அதனால்தாம் தம்மை பாரதிதாசன் என்று அழைத்துக்
கொண்டார். அவரின் பார்வையில் பாரதி ஒரு பார்பனவாதியாகவோ, இந்துத்துவவாதியாக
தோன்றவில்லையே ? ஏன் ?

ஒரு மனிதனை முழ்மையாக புரிந்து கொள்ள
அவனின் முழு வாழ்வையும் பார்க்க
வேண்டும் என்பதே சரி..

////////செந்தமிழ் நாடெனும் போதினிலே யின்பத்
தேன்வந்து பாயுது காதினிலே என்றெழுதித்
தமிழ்நாட்டை அப்படியே நெஞ்சால் எழுதி
முடித்தார்" (8)

என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூறுகிறார். இவ்வாறாகப்
பாரதி நண்பர்களுடைய வேண்டுதலாலும், கட்டாயத்தாலும் தான், "செந்தமிழ்
நாடெனும் போதினிலே" என்ற பாடலையும், "யாமறிந்த மொழிகளிலே" என்ற பாடலையும்
எழுதினார். இந்தப் பாடல்களுக்காக அவருக்கு மதுரைத்
தமிழ்ச் சங்கம் பரிசாக
ரூ.100 அளித்தது. (9////////

so ? எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக்
கொள்ளாலாம். (interpretation)

உள்ளதில் மெய் உணர்வு இல்லாமல் ஆழமான,
உணார்சிகரமான கவிதைகளை, பிறர் சொல்கிறார்கள
என்று எழுத முடியாது. எழுதுனாலும் குற்ற‌ம் /
எழுதாவிட்டாலும் குற்ற‌ம். வேடிக்கை..

//இதுகுறித்து ஆய்வாளர் க.கைலாசபதி கூறுவதாவது:

"1949 இல் ஓமந்தூரார் அரசு பாரதி நூல்களின் பதிப்பு
உரிமையை வாங்கியது. 1950 இல் அரசு பாரதி நூல்கள்
பதிப்புக் குழு ஒன்றை உருவாக்கியது. அக்குழுவில் இருந்த
ரா.பி.சேதுப்பிள்ளை, மு.வரதராசனார் போன்றோர்
பாரதியின் கவிதைகளில் மூலப்படியில் இருந்த
கிரந்த எழுத்துக்களை முழுமையாக நீக்கிவிட்டதாகவும்,
1909 இல் வெளிவந்த ஜன்மபூமியில் ஸமர்ப்பணம்
முகவுரை ஆகியவற்றின் கீழ் ஸி.ஸுப்பிரமணிய பாரதி
என்றே கையொப்பமிட்டுள்ளார்" (20) என்றும் ஆய்வாளர் க.கைலாசபதி கூறியுள்ளார்.
/////

இருக்கலாம். 100 ஆண்டுகளுக்கு முன் மணிபிரவள
நடைதான் சாதரணமாக இருந்த்து. அந்த காலத்தில் தூய
தழில் இயக்கம் வளர்வில்லை. சம்ஸ்கிருதம் பற்றிய
இன்றைய அரசியல் எதிர்ப்போ, சமஸ்கிருதம்
பார்பனியத்தின் ஆதிக்க மொழி என்ற கருத்தோ
பொதுபுத்தியில் பரவாத காலம் அது.

அன்று தமிழ் கவிதை என்றாலே யாப்பு / செய்யுள் தாம்.புதுக்கவிதையே இல்லை.
இன்று எழுதுவது சுலபம்.

எளிய தமிழ் கவிதைகளின் முன்னேடி பாரதி.
முழ்வதுமாக சமஸ்கிருதம் கலக்காமல் எழுத வேண்டும் ;
அப்படி எழுதுவதுதான் சரியானது என்ற கருத்து அன்று
இல்லை. அப்படி இருந்தாலும் பாரதி வளர்ந்த /வாழ்ந்த
காலச்சூழ் நிலையை பாருங்கள். பார்பனராக பிறந்து,
காசியில் படித்து, சம்ஸ்கிருதம், ஹிந்தி மொழிகளில் இலக்கியங்களில் நல்ல
தேர்ச்சி பெற்ற அவர், தமிழில்
இந்த அளவு அன்றைய காலகட்டத்தில் எழுதியதே
பெரிய விசியம். மணிபிரவாள தமிழ் சூழ்னிலை அன்று.
பாரதி தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டையும் உயர்வாக
கருதியவன். (பார்பானியவாதமாக அல்ல) ; சம்ஸ்கிருதத்தில்
பல அரிய காப்பியங்களை படித்து திளைத்தார் / மகிழ்ந்தார். தமிழிலும்தான்.
அவனை பொருத்தவரை பேதம், ஏற்ற
தாழ்வு இல்லை.

குழந்தை உள்ளம் கொண்டவன் பாரதி.

//வேத உபநிடத மெய்நூல்களெல்லாம் போய்ப்
பேதக் கதைகள் பிதற்றுவாரிந் நாட்டினிலே" (2)

எனக் கூறி, இங்கு "ஆரியர்கள் வாழ்ந்த நாடு அற்புத
நாடென்றும், அவர் எழுதிய வேத உபநிடதங்களெல்லாம்
மறைந்து போயினவே" என்றும் மிகவும்
வருத்தப்படுகிறார்.

///

வருத்தபடுவது அதற்காக அல்ல.
"பேதக் கதைகள் பிதற்றுவாரிந் நாட்டினிலே" :
இதற்க்காகத்தான்.

அதாவது பல ஜாதி. இன, மத, பிரிவுகளை அதற்கான கதைகளைதான் இன்று மக்கள்
முன்னிருத்தி பேதம்
கற்பித்து பிரிந்து வாழ்கின்றனர் என்றா வருத்தம்.

மனுதர்மம் பின்னர் வந்த சதி. உபனிடங்களில் உள்ள
தத்துவங்கள், மனுதர்மம் போன்ற அநியாயமான,
(பிறப்பிலேயே ஏற்ற தாழ்வு கற்பிக்க்கும்), ஆணாதிக்க
கருத்துக்கள் அல்ல. அதைதாம் பாரதி குறிப்பிடுகிறான். ஒழுக்கத்தால் தான்
ஒருவன் உண்மையான பிரமணனாக முடியும் ; பிறப்பால் அல்ல என்பதை உபனிடம் /
கீதை வலியிருத்துகிறது. அதை பாரதியும்
எடுத்துரைக்கின்றான். இந்து மத கருத்துக்கள் பற்றி
பாரதியின் பார்வை வேறு ; ஆர்.எஸ்.எஸ் பார்பனர்களின்
பார்வை வேறு.

Friday, September 19, 2008

மதமாற்றம் செயவது தவறா என்ன ?

க‌ர்னாட‌காவில் ச‌மீப‌த்தில் ந‌ட‌ந்த‌ கிருஷ்த்துவ‌ வ‌ழிபாட்டு
ஸ்த‌ல‌ங்க‌ளின் மீது ப‌ச்ர‌ங்தால் வெறிய‌ர்க‌ள் ந‌ட‌த்திய‌
தாக்குத‌ல்க‌ளை முத‌லைமைச்ச‌ர் எடியூர‌ப்ப‌ சிறிதும் பெறுப்போ. வெக்க‌மே
இல்லாம‌ல் நியாய‌ப‌டுத்தி பேசுகிறார். ம‌த‌ மாற்ற‌ம் செய்வ‌தான் தான்
இந்த தாக்குத‌ல்க‌ளாம். ஒரு முத‌லாமைச்ச‌ரின் பேச்சு இப்ப‌டியா ? கொடுமை.
(அவ‌ரிட‌ம் வேறு என்ன‌ எதிர்ப்ப‌ர்ப‌து ? )

அது ச‌ரி, ம‌த‌ மாறுவ‌து ஒரு த‌னி ம‌னித‌ உரிமை. தலித்துக‌ள் மாறினால்
மேல் ஜாதியின‌ருக்கு என்ன‌ ? ச‌ரியான‌ ஃபாசிஸ்டுக‌ள் தாம் இப்படி
காட்டுமிராண்டி போல் தாக்குவ‌ர்.

இப்ப நாட்டுல‌ இதுதான் முக்கிய‌ பிர‌ச்ச‌னையா என்ன‌ ?

மூட‌ர்க‌ள்...

Tuesday, September 16, 2008

அமெரிக்காவின் 'சுதந்திர தேவி சிலை'

அமெரிக்காவின் 'சுதந்திர தேவி சிலை'

ந்யூ யார்க் நகரின் துறைமுகம் அருகே, கடலின் நடுவில் ஒரு மிகப்
பிரமாண்டமான சிலை : சுத்ந்திர தேவி சிலை. 1880களில் ப்ரான்ஸ் நாடு
அன்பளிப்பு இந்த சிலை.

அமெரிக்கா என்றால் இன்று பெரும்பாலானோருக்கு இருக்கும் பிம்பம் : புஷ்,
ஈராக் நாட்டை ஆக்கிரமிப்பிப்பு. சி.அய்.ஏ சதிகள், 'ஏகாதிபத்திய
அடக்குமுறைகள்'...

ஆனால் 1930கள் வரை இருந்த அமெரிக்க வேறு. அதுதான் உண்மையான அமெரிக்க.
(இன்றும் அந்த அடிப்படை கொள்கைகள் உள்ளன, ஆனால் மறைந்து நிற்க்கின்றன).
அன்று உலக அரங்கில் அமெரிக்கா நுழையவில்லை. படை எடுப்புகள் இல்லை.
சோவியத் ரஸ்ஸியாவுடன் பனிப்போர் ஆரம்பமாகவில்லை.

1774இல் உலகின் முதல் சுதந்திர, ஜனனாயக அரசு அமெரிக்காவில்தான் உருவானது.
சம‌த்துவம் மற்றும் சுதந்திரம் போன்ற விசியங்கள் நடைமுறையில் ஏற்க்கபட்ட
வரலாறு. அன்ரு உலகம் முழுவது மன்னர் ஆட்சி மற்ரும் நிலப்பிரவுத்வ
சர்வாதிகாரம்தான்.

ஆனாலும் அமெரிக்காவில் ஜனனாயகம் முழுமையடைய மேலும் ஒரு நூற்றாண்டானது.
கருப்பின மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டதை நிறுத்த ஒரு பெரும் உள் நாட்டு
போர் 1860 65 நடந்து ;அதன் இறுதியில் ஆப்ரகாம் லிங்கன் உயிர் தியாகம்
செய்தார். (காந்தியடிகளை ஒரு மத வெறியன் கொன்றதர்க்கு இணையானது).
செவ்விந்யர்களையும் வேட்டையாடி அவர்களின் நிலங்களை அபகரித்த கொடுமைகளும்
நடந்தன. 1880களில்தாம் அவை நின்றன.

1880கள் முதல் 1914 வரை பொற்காலம் என்று வர்ணிக்கிறார்கள். அந்த
காலகட்டத்தில் அய்ரோப்பாவில் மத அடக்குமுறைகள் ; யூதர்கள்,
கத்தோலிக்கர்கள், அய்ரிஸ்கார்கள், கிழக்கு அய்ரோபிய நாட்டில்
சிறுபான்மையினர், போலிஸ் நாட்டினர், போன்ற பல்வேறு குழுக்கள்
நசுக்கப்பட்டனர். ஏழைகளின் நிலை கொடுமையாக இருந்தது. வறுமை, பஞ்சம் பல
இடங்களில். அவர்கள் அனைவருக்கும் அமெரிக்க திறந்த கரங்களுடன் அடைக்கலம்
அளித்தது. (இன்று போல் விசா வழங்குவதில் கட்டுபாடு இல்லை) ; வந்தாரை
வாழவைக்கும் நாடாக திகழ்ந்தது. டைட்டானிக் படத்தில் பார்திருப்பீர்கள்.
ஏழை மக்கள் பலரும் புது வாழ்வு தொடங்க புது உலகம் நோக்கி பயண்ம செய்தனர்.
அவர்களின் சொத்து நம்பிக்கை மட்டுமே.

வந்தவர்கள் சுந்திரமாக வாழ, வேலை பார்க்க, தொழில் தொடங்க எந்த தடையும்
இல்லை. அய்ரொப்பாவில் போல் கட்டுபாடுகள், அடக்குமுறைகள் இல்லை.

மேற்க்கே கலிஃபோர்னியா போன்ற மாகாணங்களில் பச்சை நிலங்கள் (160 ஹெக்டேர்
ஒரு குடும்பத்திற்க்கு) இலவசமாக அளிக்கப்பட்டன. விவசாயத்தை துவங்கி
செழிக்க, உழைப்பை மட்டும் போட புதியவர்கள் ஆர்வதுடன் தலைபட்டனர்...

அட்லாண்டிக பெருங்கடலை கடந்து வந்த மககளுக்கு ஒரு மிக முக்கிய ஆதர்சமாக,
வரவேற்ப்பாக நின்றாள் அந்த சுதந்திர தேவி..

சுதந்திரம் என்றால் என்ன என்று சர்வாதிகாரத்தில் துன்புற்றவருக்கே
புரியும் / தெரியும்.

அய்ரொபாவில் பரம்பரை பணக்கார்கள் என்றும், தனது மூதாதைகள் 'லார்டுகள்'
என்றேல்லம் பெருமை அடித்துக்கொள்வார்கள். உடல் உழைப்பு மற்றும் தொழில்
முனைவோர்களுக்கு பெரிய மரியதை இல்லை. ஆனால் மாறாக, அமெரிக்காவில் பரம‌
ஏழையாக பிறந்து, தன் சுய முயற்ச்சியால், கடும் உழைப்பால் உயர்பவர்களுக்கே
மரியாதை. அவர்களைதாம் வழிகாட்டியாக கருதுவர். தாமஸ் ஆல்வா எடிசன், ஹென்றி
ஃபோர்ட், ஜான் ராக்ஃபெல்லர், கார்னிகி, மார்கன், ஹில்டன், டர்னர், லீ
அயோக்கா, ரிச்சார்ட் பிரான்சன், பில் கேட்ஸ் போன்ற சாதனையாளர்களே அங்கு
ஹீரோக்கள். அனைவரும் சாதாரண குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கூட
இல்லாமல், தம் சுய முயற்ச்சியால் பெரும் பொருள் ஈட்டி, சாம்ராஜியங்களை
நிறுவினர். அதன் மூலம் அமெரிக்க பொருளாதாரமே வளர்ந்து சுபிட்சம்
அதிகரித்தது.

The "American dream" என்பார்கள். யார் வேண்டுமானாலும் உழைத்து முன்னேற
வாய்பு ; மொழி, இனம், நிறம், மதம் போன்ற கட்டுப்பாடுகள் இல்லை. Metling
point என்று அமெரிக்க கலாச்சாரத்தை சொல்வார்கள்.

அதனால்தான் இன்றும் உலகம் முழுவது இருந்து மக்கள் அமெரிக்கவிற்க்கு புலம்
பெயர்ந்து வாழ முனைகிறார்கள். அவர்களை சுதந்திர தேவி வரவேற்க்கிறாள்...

Friday, July 25, 2008

KGB / CIA ஒற்றர்கள்

மாணவப்ப‌ருவத்திலிருந்தே 'ஸ்பை திரில்லர்ஸ்' நாவலகளை
விருப்பி படிப்பேன். (இன்றும்தான்) ; ஆனாலும் பல இடங்களில்
நிஜ வாழ்க்கை சம்பவங்கள், கற்பனைகளை விட மிக் மிக
சுவாரசியமாக இருக்கும்.

பீட்டர் ரைட் என்ற முன்னாள் பிர்டிஷ் உளவுத்துறை (MI6)
அதிகாரி, 20 வருடங்களுக்கு முனெழுதிய ஸ்பைகெட்சர் என்ற சுயசரிதை மிக மிக சுவாரசியமான ஒரு நூல். திரும்பத் திரும்ப வாசிக்க தூண்டும். அதை வெளியட பிரிட்டிஸ் அரசு கடும் முயற்சி செய்தது. ரைட், துணை இயக்குனராக கடைசியாக பணியாற்றி பின் ஓய்வு பெற்றார். பின் ஆஸ்த்ரேலியவிற்க்கு புலம்பெயர்ந்து, அங்கிருந்து தனது நூலை வெளியிட்டார்.

சோவியத் ரஸ்ஸிய்வின் கெ.ஜி.பி மற்றும் அதன் துணை அமைப்புகளுடன் சுமார் 30௦ ஆண்டு காலம் அவர் நடத்திய நிழல் யுத்தங்கள், உளவுகள் பற்றி மிக விரிவாக, ஆதார பூரிவமாக விவரித்துள்ளார். the great game during the cold war
era...

இதனுடன் ஒப்பிட்டால் ஜேம்ஸ் பாண்ட் கதைகள் மிகவும்
crude ஆகவும், மேலோட்டமாகவும் இருக்கும்.

ரிங ஆஃப் 5 (Ring of Five) என்ற அய்வர் குழு 1930களில் கேம்பிர்டி
பலகலைகழகட்தில் படித்த இளம் இடதுசாரிகளை கொண்ட
ஒரு குழு. அவர்கள அனைவரும் கம்யூனிச கொள்கைகளை
ஏற்று, பிறகு கே.ஜி.பி யின் வலையில் சிக்கியவர்கள். அனவருக்கும் ஒருவரை ஒருவர் பற்றி தெரியும். அவர்களுக்கு இடப்பட்ட முதல் ஆணை, தங்களின்
உண்மையன கொளகைகள் யாருக்கும் தெரியாமல் அமைதியாக படித்து, ஆங்கில அரசின் பல் துறைகளில் வேலையில் சேர்ந்து முன்னேறி உயர் பதவிகளில் அமர்வது.

அவர்களில் முதன்மையானவரும், முக்கியமானவரும் தான் ஹேரால்ட்
'கிம்' பில்பி. எம்.அய்.6 இல் உயர் பதவியில் இருந்தார்.
வாஸிங்க‌டனுக்கு பிறகு அணுப்பட்டார். பல வருடங்கள் கே.ஜி.பி க்காக உளாவு பார்த்த பின், அவர் மீது சந்தேகம் விழுந்தது. திடீரென்
மாஸ்கோவிற்க்கு தப்பிச் சென்றார். அங்கு ஒரு பத்திரிக்கையாளர்
கூட்டத்தில் தான் கேஜிபி யில் ஒரு கர்னல் பதவி வகிப்பதாக வெளிபடுத்தினார்
!!!

'Spycatcher' by Peter Wright :

கெ.ஜி.பி யின் உளவு நடவடிக்கைகள் மற்றும் நுட்பமான செய்லதிட்டங்கள்,
mis-information attempts, double spies, even triple
spies, comunication networks,controllers, sleepers, moles withinh the British
and American establisments, etc பிரமிப்பூட்டும். அவற்றை
உள்னாட்டில் முறியடிக்க முயன்ற நிறுவனம் MI5
வெளி நாடுகளில் உளவு சேகரிக்கும் நிறுவனம் MI6 (James
Bond iruntha Millitary Intellegence 6)

பீட்டர் ரைட் ஒரு எலெட்ரானிக்ஸ் நிபுனர் ; விஞ்ஞார்னியாகதான் எம்.அய்.5
இல் சேர்ந்தார். (அவரது தந்தையும் ஒரு ரேடியோ விஞ்ஞானிதான். மார்கோனிக்கு கிழ் நேரடியாக முதலாவது உலக யுத்ததின் போது பணி புரிந்தார்). அதற்க்கு முன் பல ஆண்டுகள் பிர்டிஷ் கப்பற்படையில் விஞ்ஞானியாக பணியாற்றினார்.

Radio traffic analysis, developing new and accurate mikes, triangulation
and tracing of enemy radios, cryptography, code breaking போன்றவை
அவரின் ஈடுபாடுகள். முதலில் துல்லியமக ஒட்டுக்கேட்க்கும்
ஒரு கருவியை 50களில் உருவாக்கினார். அதே போல்
ரஸ்ஸிய ஓட்டுக்கேட்க்கும் கருவிகளை எங்கு மறைத்துவைத்திருந்தாலிம்
'கண்டு' பிடிக்க பல புதிய
முறைகளை தொடங்கினார்

////Peter Wright
During World War II, however, he joined the Admiralty's Research Laboratory.
After the war, Wright joined Marconi's research department and,
according to Spycatcher, he was instrumental in resolving a difficult
technical problem. The CIA sought Marconi's assistance over a covert listening device (or
"bug") that had been found in a replica of the Great Seal of the United States
presented to the U.S. Ambassador in Moscow in 1945 by the Young
Pioneer organization of the Soviet Union. Wright determined that the
bugging device, dubbed The Thing, was actually a tiny capacitive
membrane (a condenser microphone) that became active only when 330 MHz
microwaves were beamed to it from a remote transmitter. A remote receiver could then
have been used to decode the modulated microwave signal and permit
sounds picked up by the microphone to be overheard. The device was
eventually attributed to Soviet inventor, Léon Theremin.

In 1954 Wright was recruited as principal scientific officer for MI5. According
to his memoirs, he then was either responsible for, or intimately involved
with, the development of some of the basic techniques of ELINT, for example:

Operation ENGULF, acoustic cryptanalysis of Egyptian Hagelin cipher
machines in 1956; Operation RAFTER remote detection of passive radio
receivers used by Soviet agents through detecting emanations from the
local oscillator, in 1958 (a technique now more commonly used to
enforce payment of television licences); and Operation STOCKADE, analysis of
compromising emanation from French cipher machines in 1960. In
addition Wright claimed that he was regularly involved in black bag jobs to illegally install
bugs for the government, and that MI5 was so well organised for this they even had expert tradesmen on hand to rapidly and undetectably effect repairs in the event that someone bungled and made a mess whilst installing a bug. He also claimed that MI5 was involved in a conspiracy to remove Labour prime minister Harold Wilson. /////

Russian mis-information techinics பற்றி படிக்கும் போது மிக சுவாரசியமாக
இருக்கும். அதவாது பொய்யான தகவல்களை வேண்டுமென்றே எதிரி நாட்டு
உளவுத்துறையினருக்கு கிடைக்குமாறு பல வழிகளில் ஏற்பாடு செய்து, அதன்
மூலம் அவர்களின் கவனத்தை திசை திருப்பி, வீணாடிப்பது. Diverting
attention and creating confusion within CIA/ MI6

இதற்க்கு false defectors எனப்படும் பொய்யான இரட்டை உளவாளிகள் முக்கிய
க்ருவியாக பயன்ப்டுத்தப்பட்டனர். அதாவது ரஸ்ஸியாவில் வாழ்கை பிடிக்காமல், 'தப்பி' வந்து, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் உளவுத்துறையிடம் 'தஞ்சம்' புகுந்து, தாய்னாட்டை பற்றிய
'ரகசிய' தகவல்களை காட்டிக்கொடுத்தல். பெரும்பாலும்
கெ.ஜி.பி இல் அதிகரிகளாக அல்லது ரஸ்ஸிய ராணுவத்தில் விஞ்ஞானிகளாக பணி புரிந்தவர்களே அப்படி வந்தனர்

சில சுவாரசியமான உளவு வேலைகள் :

1962இல் சோவியத் ரஸ்ஸியாவை உளவு பார்க்க U-2 என்ற
மிக நவீன விமானம் மூலம் அமேரிக்கர்கள் 7 மைல்
உயரத்தில் பறந்து படம் பிடித்தனர். 7 மைல் உயரம் தாக்கும் விமான்
எதிர்ப்பு பீரங்கிகள், ஏவுகணைகள், போர் விமானங்கள்
அப்போது ரஸ்சியாவிடம் இல்லை. அமெரிக்க விமானங்கள் துருக்கியில்ல் உள்ள நேடோ விமான தளத்திலிருந்துதான பறந்தன. கே.ஜி.பி ஒரு துருக்கிய உளவாளியை அந்த விமான தளத்தில் ஒரு சாதாரண கூலித் தொழிலாளியாக அனுப்பியது. ஓடுபாதை மற்றிம் விமானங்களை சுற்றிய இடங்களை கூட்டிப் பெருக்கும் வேலை. ஒரு இரவில், யாரும் பார்க்காத சமயத்தில் விமானத்தில் நுழைந்த அந்த உளவாளி, Altimeter (விமானம் பறக்கும் உயர‌த்தை காட்டும் கருவி) கருவியை பேனலில் பொருத்த உதவிய வலது பக்க ஸ்க்ரூவை
மட்டும் கழட்டி அதற்க்கு பதிலாக ஒரு காந்த சக்தி மிகுந்த
ஒரு ஸ்க்ரூவை மாட்டினார். வேறு எந்த கோளாரும் செய்யாமல் சத்தமில்லாமல் வெளியேறினார்.

அடுத்த நாள் காலை, காரி பவர்ஸ் என்ற அமேரிக்க விமானி அந்த விமானத்தை வழக்கம் போல கிளப்பி ரஸ்ஸியாவை படம்பிடிக்க ஆரம்பித்தார். காந்த ஸ்குரு இழுத்தால் விமானம் 7 மைல் உயரத்திற்க்கும் மிக தாழ்வாக பறக்கும் போதே, அந்த அல்டிமேட்டர் 7 மைல் அலகை காட்டியது. உடனே ரஸ்ஸியர்கள் ஒரு விமான எதிர்ப்பு ஏவுகணையை
செலுத்தி அந்த அமேரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்தினார்கள். காரி பவர்ஸ்
பாராச்சூட் மூலம் தரை இறங்கி சிறை பிடிக்கப்பட்டர். அதன் பின்
அமெரிக்க வேவு விமானங்கள் வரவில்லை. ரஸ்ஸியர்கள் உண்மையிலேயே 7 மைல் உயர்த்தில் பற்க்கும் விமானத்தை தாக்கும் ஏவுகணையை உருவாக்கிவிட்டாதாகவே அமேரிக்கார்கள் வெகு காலத்திற்க்கு நம்பினார்கள். :))))

முக்கிய அலுவலங்களில் செகரட்ரைகளாக பணி புரியும் அவலட்சனமான, குண்டான முதிர் கன்னிகளை மிக அழகான வாலிப உள்வாளிகளின் காதல் வலையில் வீழ்த்தி தகவல்களை பெறுவது ஒரு நூதனமான முறை.
தனிமையில் வாடும் பெண்களை பல வாரங்கள் பின் தொடர்ந்து, 'சந்தித்து', டேட் செய்து பிறகு காதல் வலையில் விழ வைக்க சில இளம் உளவாளிகளுக்கு ஸ்பெஸல் பயிற்சி உண்டு. !! :))

அலுவ‌ல‌க‌ங்க‌ளில் முக்கிய‌ ராணுவ் ம‌ற்றும் இத‌ர‌ஆவ‌ணாங்க‌ளை டைப் அடிக்கும் ப‌ணியில் இருக்கும்பெண்க‌ளே பெரும்பாலும் குறிவைக்க‌ப்ப்டுவ‌ர். டைப் அடித்த‌ பின் கார்ப‌ன் பேப‌ர்க‌ளை அழிக்காம‌ல், அவ‌ற்றை ர‌க‌சிய‌மாக‌ காத‌ல்ர்க‌ளிட‌ம் சேர்பிக்க‌ அவ‌ர்க‌ள் தூண்ட‌ப்ப‌டுவ‌ர். (அப்போதெல்லாம்ப‌ழைய‌ முறை டைப்ரைட்ட‌ர்க‌ள் தான் இருந்த‌ன‌). இந்த‌ முறைக‌ளில்இஸ்ரேலிய‌ மொஸாட்,கே.ஜெ.பி போன்ற‌ அமைப்புக‌ள் கில்லாடிக‌ள். !!!

"False flag approach" என்று ஒரு முறை. அதாவது, உளவாளி,ஒரு அர‌சு ப‌த‌வியில் இருப்ப‌வ‌ரிட‌ம் தான் வேறு ஒரு நாட்டு உள‌வாளிஎன்று ந‌ம்ப‌ வைப்ப‌து. உதார‌ண‌மாக‌, தென்ஆப்பிரிக்க‌ அர்சு , நிற‌ வெறி கொள்கைக‌ளை க‌டுமையாக‌ அபார்த்தாய்ட்என்ற‌ பெய‌ரில் ப‌ல‌ ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌ க‌டைபிடித்தால், ப‌ல‌ மேலைநாடுக‌ள் தெ.ஆப்பிரிக்க‌அர‌சிட‌ம் உறவை துண்டித்து, அய்.னா ச‌பை மூல‌ம் ப‌ல‌ த‌டைக‌ளைவித்தித‌ன‌. ஆனால் சோவிய‌த் ர‌ஸ்ஸியா தெ.ஆப்பிராக்கிவை குறிவைக்கிற‌துஎன்ற‌ ப‌ய‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தி, தெ.ஆப்பிரிக்கா உள‌வாளி போல் ப‌ல‌ போலி த‌டைய‌ங்க‌ள் /அடையாளங்க‌ளை உடைய‌ வேறு ஒருநாட்டு உள‌வாளி (மொஸாட், கே.ஜி.பி போன்றவை),அய்ரோபிய நாடுகளில் அரசு அதிகாரிகள் (சிலர்மறைமுகமாக தென் ஆப்பிரிக்க அரசை முற்ரிலும் கைவிடக்கூடாது என்றுநம்பியவர்கள்) சிலரிடம் தம் கைவரிசையயை காட்டின....