Friday, November 21, 2008

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்

விஷ்ராந்தி முதியோர் இல்லத்தில் தற்போது இருக்கும், எழுத்தாளர் ராஜம்
கிருஷ்ணன் அவர்களை சந்தித்து, சுமார் 2.5 மணி நேரம் உரையாடினேன். மறக்க
முடியாத சந்திப்பு.
அவரின் வய‌து 83..

தன் நீண்ட வாழ்க்கை பயணத்தை பற்றி பல விசியங்கள் சொன்னார். முசிறியில்
பிறந்து, பள்ளி இறுதி வரை மட்டும் படித்து, காவேரி நதியில் விளையாடி
வளர்ந்தவர். பல மொழிகளையும், இலக்கியங்களையும் சுயமாக கற்றவர்.

செக்கோஸ்லோவோக்கிய, ரஸ்ஸியா பயண அனுபவங்களை பற்றி கூறினார். பெண்ணியம்
பற்றி அந்த காலத்தில் இருந்து நிலை பற்றி, படுகர்கள் மற்றும் பழங்குடி
மக்களின் வாழ்க்கை, கலாச்சாரம் பற்றி ஆய்வு செய்ய தாம் கடும்
பிரயத்தனத்துடன் செய்த முயற்சிகள் பற்றி கூறினார்.

எழுத்தாளர்கள் அம்பை, ஜெயகாந்தன், சுந்திர ராமசாமி, சுஜாதா, மேலும் பலரை
பற்றி பேசினார்.

தனது படைப்புகளான : ஆன்டி உடோபியா (Anti-Utopia), வேருக்கு நீர்,
டாக்டர் ரங்காச்சாரியின் வாழ்க்கை வரலாறு, பாரதி பற்றிய ஆய்வுகள்
குறித்து விரிவாக பேசினார்.

அவருக்கு குழந்தைகள் இல்லை. கணவரும் காலமாகிவிட்டார். இருந்த வீட்டை
விற்ற பின் கிடைத்த பணத்தை, உறவினர் ஒருவர் ஏமாற்றி அபகரித்துவிட்டு அவரை
அனாதரவாக தவிக்க விட்டுவிட்டார். காவல் துறை உயர் அதிகாரி திலகவதி
(அவரும் ஒரு எழுத்தாளர் தான்) இவரை மீட்டு, விசராந்த்தி முதியோர்
இல்லத்தில் சேர்த்தார்.

கொடுமையான நிலை...

மின் தமிழ் இழையில் தமிழ் தேனி அவர்கள் எழுதியது :

http://groups.google.co.in/group/minTamil/browse_thread/thread/b4012b9cbd32abd0/65f0b80ed463fd25?hl=en#65f0b80ed463fd25

Thursday, November 6, 2008

பட்டின‌த்தாரும், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டமும் !

நாப்பிளக்க பொய்பேசி நவநிதியம் நாளும் தேடி
நலமில்லா நாரியரைக் கூடி,
பூப் பிளந்து புலபுலவென, கலகலவெனவரும்
புற்றுஈசல் போல பிள்ளைகளைப் பெறுவீர்
காப்பதற்க்கும் வழியறியீர், கைவிடவும் மாட்டீர்
ஆப்பசைத்த குரங்குதன் நிலை பட்டீரோ.

-பட்டின‌த்தார்.