Friday, May 30, 2008

நூறு ஆண்டுகளுக்கு முன் சென்னை / மெட்ராஸ் - அரிய புகைப்படங்கள்

பாரிஸ் கார்னர்
விக்டோரியா ஹால், சென்ட்ர‌ல் அருகில்

துறைமுகம்

மார்கெட்


இன்று ப‌ர்மா பஜார் இருக்கும் இட‌ம்


எஸ்பலாண்ட்





பார‌தி சாலை, ராய‌ப்பேட்டை

'எலிப்பொறிக்குள் மனிதர்கள்' - ஆண்டாள் பிரியதர்ஷினி

'எலிப்பொறிக்குள் மனிதர்கள்'

எல்லாருமே
பிள்ளையார் ஆகிவிட்டோம்
உலகமே
எலி வாகனத்தில்
பயணிக்கிறது

சிவ பார்வதியைய் சுற்றிய
பிள்ளையாராக
வாமன வாரிசுகள்
ஓரடிப் பெட்டிக்குள்
உலகைச் சுற்றுகிறார்கள்.

கால்களைக் கழற்றிவிட்டுக்
கைவிரல்களால்
ஊழித் தாண்டவம்
ஆடுகிறோம்
அரூபச் சிலந்தி வலையை
எலியால் பிறாண்டிப்
பிறாண்டிப் பிரபஞ்சம் தாண்டித்
தேடுகிறோம்

எலிக்கு மனித வாகனம்
இருபத்தொன்றில்
வாழ்க எலி சாம்ராஜ்யம் !

-ஆண்டாள் பிரியதர்ஷினி

நன்றி : சுஜாத்தாவின் கற்றதும் பெற்றதும்.

Income Tax Raid பற்றி திருக்குறள் :

Income Tax Raid பற்றி திருக்குறள் :

அளவறிந்து சேர்க்கா தான் செல்வம்
உளவறிந்து பறிக்கப் படும்.

அடக்கம் அமரருள் வைக்கும் அடங்காமை
ஜெயில் உள் வைக்கும்.

(1997இல் 'அம்மாவும், சின்னம்மாவும்' 'மாமியார்'
வீட்டிற்க்கு அனுப்பப்பட்ட போது
இயற்ப்பட்ட புதுக்குறள்கள் !!!)

அமேரிக்காவில் ஒரு பத்திரிக்கை விளம்பரம் :

1. 'உஙக்ளுக்கு எப்போதாவது ஆயாசமாக, அதைரியமாக
இருந்தால் இந்த ஆளை யோசித்துப் பாருங்கள் :

பள்ளிப் படிப்பை இவன் பாதியில் விட்டான். ஒரு
கடை வைத்து எல்லாவற்றையும் இழந்தான்.
கடன்களை அடைக்க 15 வருஷமாயிற்று. கல்யாணம்
பண்ணிக் கொண்டு சந்தோசமில்லாமல் அவஸ்தைப்
பட்டான், இரண்டு தடவை தேர்தலுக்கு நின்று தோற்று
போனான்.

அவன் ஒரே ஒரு சொற்பொழிவு மட்டும் பிற்பாடு பிரசித்தமாயிற்று. ஆனால்
அப்போது யாரும் அதை கவனிக்கவில்லை. பத்திரிக்கைகளில் அவனைத்
தாக்கினார்கள். நாட்டின் பாதி ஜனங்கள் அவனை
வெறுத்தார்கள்.

இத்தனை இருந்தும் உலகமெங்கும் எத்தனை பேர்
இந்த கன்னம் ஒட்டின, கசங்கிய மனிதனால்
ஊக்குவிக்கப் பட்டிருக்கிறார்கள் !

"அவன் பெயர் அப்ரகாம் லிங்கன்."

----------------------------------

2. ஆஸ்கார் வைல்டு சொன்னார் : 'மாறாமல் இருப்பது கற்பனையற்றவரின்
சரணாலயம்' என்று. எனவே தினம்
6.05க்கு எழுந்திருப்பதை நிறுத்து. 5.06க்கு எழுந்திரு.
அதிகாலை ஒரு மைல் நடந்து பார். ஆபிசுக்கு வேறு
வழியே செல். மனைவியுடன் அடுத்த சனிக்கிழமை
ட்யூட்டி மாற்றிக்கொள். புதுசாக ஏதாவது வாங்கிப்பார்.
காட்டுப் பூக்களை பறி. ராத்திரி தனியாக விழித்திரு.
பார்வையில்லாதவர்களுக்கு படித்துக் காட்டு. தெருவில்
போகும் மஞ்சள் ஸாரி பெண்களை எண்ணிப்பார். புதிய பத்திரிகைக்கு சந்தா
செலுத்து. நடு ராத்திரியில் சைக்கிள்
ஓட்டு. உங்கள் ஊர் எம்.எல்.ஏ.க்கு ஒரு படை திரட்டி
அழைத்துச் செல். இத்தாலிய மொழி பழகும் பையனுக்கு
உனக்கு தெரிந்ததை சொல்லித்தா. இரண்டு மணி நேரம் இடைவிடாமல் மோட்ஸார்ட்
கேள். இந்த வயசில் பரத
நாட்டியம் துவங்கு. ஏதாவது செய்து வாழ்க்கையை
அனுபவி. ஏனெனில் நாம் இந்தப் பக்கம் ஒரு முறைதான்
வருகிறோம்.'

நன்றி : சுஜாத்தாவின் 'ஒரிரு எண்ணங்கள்'

Wednesday, May 28, 2008

ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்களின் போராட்டம் ?

2003 தேர்தலில் பி.ஜெ.பி தங்களை எஸ்.டி பிரிவில்
சேர்பதாக கூறிய பொய்யான வாக்குறுதிகளை நம்பி
'ஏமாற்ந்த' குஜ்ஜர் இன மக்கள் மீண்டும் வன்முறையில்
இறங்கி, ரயில்களை மறித்து, தண்டவாளங்களாஇ
பிளந்து 'போராட்டம்' நடத்துகின்றனர்.
(இங்க யாரும் கண்டுக்கர மாதிரி தெரியல !!)
இதுவரை 40 பேர்களுக்கு மேல் பலியாகி உள்ளனர்.
(போலிஸாரும் பலியாகி உள்ளனர்.)

இட‌ ஒதுக்கீட்டில் இருக்கும் அநியாங்க‌ள் ( ஆதாவாது கிரிமி லேய‌ர்,
சென்ச‌ஸ் இல்லா அடிப்ப‌டையில், எதோ ஒரு அடிப்படையில் விகுதங்கள்
ஒதுக்குபடல், போன்றாவை) அதில் ஓட்டு வேட்டையாக மாற்றிய அரசியல்
போன்றவைகளின் விளைவே இது.

சமீபததிய சர்வே ஒன்று குஜ்ஜார்கள் எஸ்.டி பிரிவுக்கு தகுதி அல்ல என்று
திட்டவட்டமாக அறிவித்தும் அவர்களின் போராட்டம் ஒயவில்லை.
த‌டியேடுத்த‌வ‌ன் த‌ண்ட‌ல்கார‌ன் மாதுரி, ஆள் ப‌ல‌ம் இருந்தால் என்ன‌
வேண்டுமானாலும் கேட்க்க‌லாம் என்று உள்ளது கால‌ம்.

மீனாக்க‌ள் என்ற தாழ்த‌ப்ப்ட்ட‌ பிரிவு குஜ்ஜார்க‌ளின் கோரிக்கையை
க‌டுமையாக‌ எதிர்க்கின்ற‌ன‌ர்.

உண்மை, நியாய‌ம் இதெல்லாம் என்ன‌ விலை சமூக நீதி என்ற முழக்கம் வெறும் மாயயைதானா ?

உண்மை நிலவரம் தான் என்ன ? இட ஒதுக்கீட்டில் நடக்கும் அநியாயங்கள் தான் எவை ? ஒரு வெளிபடையான, சாதி வாரி சர்வே ஏன் இன்னும் எடுக்கபடவில்லை. எந்த சாதிகளில் எத்தனை சதவீதம் உண்மையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்ற விவரம் ஏன் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. இவை பற்றி ஒரு வெளிப்படையான, நேர்மையான விவாதம் ஏன் இந்தியாவில் இல்லை.

2011 ம‌க்க‌ள் தொகை க‌ணாக்கெடுப்பில் ஜாதிவாரியான‌ ம‌ற்ற இத‌ர‌
த‌க‌வ‌ல்க‌ளை திர‌ட்ட‌ ஏன் இன்னும் த‌ய‌க்க‌ம் ? வெறும் அர‌சிய‌ல்.

உண்மையே, உன் விலை என்ன‌ ?

Saturday, May 24, 2008

பங்களாதேஸ் மக்களுக்கு மறதியா / நன்றியுணார்வு இல்லையா ?

ஜெய்பூரில் நடந்த கொடுமையான குண்டு வெடிப்புக‌ளில்
70க்கும் மேற்பட்ட அப்பாவிகள் உயிரழந்தனர். இதற்ற்கு காரணம் பங்களாதேஸை
தலைமையாக கொண்ட ஒரு ஜிகாத் அமைப்பு என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

1971 வரை பங்களாதேஸ் கிழக்கு பாக்கிஸ்தானாக, மேற்க்கு பாகிஸ்தான்
(இன்றையபாக்) உடன் இனைந்து ஒரே நாடாக இருந்ததது. மேற்க்கு பாகிஸதானிய
பஞ்சாபியினர் அரசையும், ராணுவத்திலும் முன்னனி வகுத்து, கிழக்கு பாக்
பெங்காலி முஸ்லீமகளை நசுக்கி பல அடக்குமுறை புரிந்தனர். தேர்தல்களில்
வங்காளிகள் வென்றதை ஏற்க்க மறுத்து, பாக் ராணுவத்தை, பங்களாதேச்
பகுதிகளுக்கு அனுப்பி இனப் படுகொலை பெருமளவில் புரிந்தனர். கோடிக்கணக்கான
மக்கள் அகதிகளாக இந்தியாவிற்க்கு வந்தனர். அகதிகள் வருகை மிக மிக
அதிகமானதை அடுத்து இந்தியா தலையிட வேண்டிய கட்டாயம்.

அன்று பாக் முஸ்லிம் 'சகோதரகளின்' இனப்படுகொலைகளை ச‌ந்தித்த பங்களாதேஸ்
மக்கள் 40 ஆண்டுகளில் நடந்ததை மறந்து, நம் உதவிகளை மறந்து, இன்று
இந்தியாவை 'எதிரியாக' கருதி, தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்து
வியப்பளிக்கிறது.

பார்க்க‌ :

http://en.wikipedia.org/wiki/1971_Bangladesh_atrocities

http://en.wikipedia.org/wiki/Bangladesh_Liberation_War

http://en.wikipedia.org/wiki/1971_Bangladesh_atrocities#Genocide_debate

Wednesday, May 21, 2008

புதுமைப்பித்தன் எழுதிய 'திரு ஆங்கில அரசாங்கத் தொண்டடிப்பொடிய்யாள்வார் வைபவம்'

புதுமைப்பித்தன் எழுதிய 'திரு ஆங்கில அரசாங்கத்
தொண்டடிப்பொடிய்யாள்வார் வைபவம்' :


'ஷ்ரீயப்பதியாய் ஸிம்லாச் சிகரத்தில் எழுந்தருளாநின்ற
அரசாங்க ஈச்வரன் வில்லிங்டன் மூர்த்தி' யை நோக்கிப்
பாடிய பதக்கதிலிருந்து சில :

உற்றாரை யான் வேண்டேன், ஊர் வேண்டேன், பேர் வேண்டேன்,
மற்றுமிந்த வாணிபத்தின் புன்செல்வம் யான் வேண்டேன்
பொற்றோளாய் ! உன்னுடைய பெருமை மிகு சர்வீஸில்
சிற்றுருவ மானதொரு அட்டெண்டர் ஆகேனோ !

ஊனேறு செல்வத்துடன் பிறவி யான் வேண்டேன்
தேனார் மொழிக் கிள்ளைத் தேவியரும் யான் வேண்டேன்

வானோங்கு புகழ்மிகுந்த நின்வாயி லிட்டுண்ணும்
மீனாய்ப் பிறக்கும் தவமுடைய னாவேனோ.
-----------------------------------------------------------------

மூலம் : 'அந்தக் காலத்தில் காப்பி இல்லை'
ஆ.இரா.வேங்கிடாசலபதி, காலச்சுவடு பதிப்பகம்.

Tuesday, May 20, 2008

சுஜாத்தாவின் 'பதினாலு நாட்கள்'

சுஜாத்தாவின் 'பதினாலு நாட்கள்'

1971 பங்களாதேச விடுதலை போரை பற்றிய அருமையான சிறு நாவல். சுஜாத்தாவிற்கே
உரிய அருமையான நடை.

எதிரிகளிடம் சிக்கிய ஒரு இளம் இந்திய விமானியய் பற்றிய கதை.

முக்தி பாகினி இளைஞன் ஒருவனைப் பற்றிய வரி என்றும்
மறக்க இயலாது. :

....ரத்த வெள்ளத்தில் பிறக்கப்போகும் ஒரு புதிய சகாப்த்ததின்
ஆரம்ப வரிகள் அவன் முகத்தில் எழுதப்பட்டிருந்தன. எத்தனை
ஆர்வம் !..'

இதில் மேலும் சில வரிகள் :

ஜுல்பிகார் அலி பூட்டோ ஆயிரம் வருஷ்ம் போரடுவோம்
என்று சொன்ன போர் சரியாக பதினாலு நாட்களில் முடிந்தது. ஆயிரக்கணக்கில்
இந்தியர்கள் இறந்த பதினாலு நாட்கள்.
எத்தனையோ வாழ்நாட்க்களை, எத்தனையோ ஆசைகளை,
தாபங்களை, இளம் அரவணைப்புகளை அணைத்த
பதினாலு நாட்கள்...

"எதை எழுதுவீர்கள் நீங்கள் ? யாரைப் பற்றி எழுதினாலும்
போதாதே. இன்ஞினியர்களைப் பற்றி எழுதுவீர்களா,
இன்பான்ட்ரி பற்றியா, மெடிக்கல் கோர் பற்றியா,
விமானிகள் பற்றியா, கன்னர்கள் பற்றியா, கடற்படை
பற்றியா, ஜெனரல்களைப் பற்றியா, இல்லை அந்தத்
தேசத்தில் மொனமாக மாண்ட லட்சக்கணக்கான
ஜனங்களைப் பற்றியா ? யாரைப் பற்றி ?"

"உங்களைப் பற்றி" என்றேன்.

"நான் ஒரு சாதாரண பைலட், ஐ டிட் மை ஜாப்"
என்றான் அவன்.

கனடா நாட்டினருக்கு கோபமே வராதா ? ஜாலியான மக்களா ?

கனடா நாட்டினருக்கு கோபமே வராதா ? ஜாலியான மக்களா ?

போகோ டி.வியில் வரும் Just for Laughs - Gags நிகழ்ச்சியை
விரும்பி பார்கிறோம். அருமையான practical jokes ; கனடாவில்
பதிவு செய்யப்படுகிரது. இதில் அறியாமல் மாட்டியவர்கள்
யாரும் கோபப் படுவதே இல்லை. ஜாலியா சிரிச்சிக்கிட்டே,
ஈசியா எடுத்துக்வது, ஆச்சரியமாக உள்ளது. இங்க இப்படி
செஞ்சா டென்ஸன் ஆயிருவாங்க. சண்ட வந்திரும்.

இது எப்படு மக்கா ? கனடாவில் இருக்கும் யாராவது
விளக்குங்களே....

தமிழக முதல்வர்கள முன் ஆபாச நடனங்கள்

முப்பது ஆண்டுகளுக்கு முன் வரை தமிழக முதல்வர்களுக்கு,
சினிமாகாரர்கள் பாரட்டு விழா நடத்தினால், விழாவில்
பரதநாட்டியம், கிராமிய நடனங்கள் போன்றவை நடைபெறும்.
ஆனால் செனற பத்தாண்டுகளாக, அரைகுறை உடைகள்
அணிந்த நடிகைகளின் ஆபாச நடனம் சர்வ சாதாரணாமாக
நடக்கிறது. அதுவும் அரசு விழாவான திரைபட விருது வழங்கும்
விழாவில், மகாரஷ்டர ஆளுனர், உயர் அதிகாரிகள், போலிஸ்
தலைமை அதிகாரிகள் அனைவரும் முன், சிறுதும் லஜ்ஜை
இல்லாமல் ஆடும் வெட்க்ககேடு. தமிழர் கலாசாரம் வாழ்க.

இதை போன்ற பொது நிகழ்சிகளை நடத்தி, கண்டுகளிக்கும்
சினிமாக்காரர்களையும் , அரசியல்வாதிகளையும், எங்க
ஊர் பாசையில் சொன்னால் : 'சரியான தேவ்........யா
பசங்க'

இதைவிடக் கொடுமை, சிறு நகர்புறங்களில் இருக்கும்
தனியார் நடுனிலைப் பள்ளிகளின் ஆண்டு விழாவில்,
தரமில்லாத சினிமா பாடல்களுக்கு, சிறுவர், சிறுமியர்
ஆடும் நடனங்கள். அவற்றை லோக்கல் கேபில்
டி.வியில் ஒளிபரப்பும் கொடுமை வேறு.

வாழக தமிழர் பண்பாடு.....

எனக்கு மிகவும் பிடித்த பகவத் கீதை வரிகள்

எனக்கு மிகவும் பிடித்த பகவத் கீதை வரிகள் :

உயிர் அனைத்திடத்தும் வெறுப்பின்றி, நட்பும் கருணையும்
உடையவனாய், மமகாரம் அகங்காரம் அற்று, இனப
துன்பங்களைச் சமமாய்க் கருதி, பொறுமை படைத்து,
எப்போதும் சந்தோஷமாயிருப்பவன், யோகியாய்,
தன்னடக்கமுடையவனாய், திடநிச்சயமுள்ளவனாய்,
என்னிடத்து மனம் புத்தியை சமர்ப்பித்தவனாய்,
யார் என் பக்தனாகிறானோ, அவன் எனக்கு
பிரியமானவன். (அத் - 12 / ஸ்லோகம் 13 - 14)

பைபிலில் பிடித்தது :

Wisdom resideth in the heart, that hath understanding. (Proverbs)
Do not judge them, for they do not understand.

பிடித்த அரபிய பழமொழி :

அல்லாவை கும்பிடு , அனால் ஒட்டகத்தை கட்டிப்போடு.


பிடித்த திருக்குறள்கள் :

ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்காப்
பேதையின் பேதையார் இல். (என்க்கு மிக பொருந்துகிறது !!)

தெய்வதான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்(து)
அதனை அவன்கண் விடல் (management thru delegation !!)

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப் தறிவு.

சென்னையில் பார்கக வேண்டிய இடங்கள்

1.பாரதி நினைவு இல்லம் : திருவல்லிக்கேணி பார்தசாரதி
கோவில் பின்புறம் அமைந்த இந்த வீட்டில்தான் 1921ல்
பாரதி காலமானார். பல அரிய புகைபடங்களும், அவருடைய
கையெழுத்தில் எழுதிய பல கவிதைகளின் கையெழுத்து
பிரதிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன். தமிழர்கள்
அனைவரும் அவசியம் பார்கக வேண்டிய நினைவாலயம்..

2.விவேகானந்தர் இல்லம், மெரினா கடர்கரை சாலை :
1896 வாக்கில் அமெரிக்காவில்ருந்து திரும்பிய விவேகானந்தர்
சில நாட்க்கள் தங்கியிருந்த வீடு, இன்று ராமகிருஷ்ண
மடத்த்னரால் ஒரு அற்புதமான நினைவு இல்லமாக
மாற்றப்பட்டுள்ளது. விவேகானந்தரின் வாழ்கையை
சித்தரிக்கும் அரிய புகைப்பட கூடம், இந்திய வரலாற்றை
சித்தரிக்கும் ஒரு அருமையான ஓவிய கண்காட்சி,
புத்தக விற்ப்னை கடை மற்றும் ஒரு அமைதியான
தியான மண்டபம் உள்ளன.

3.புனித ஜார்ஜ் கோட்டை : 1660 களில் ஆங்கிலேயரால்
கட்டப் பட்ட கோட்டை. அப்போதே கட்டப்பட்ட புனித
மேரி சர்ச், ஆசியாவிலேயே மிக பழமையான
ஆங்கலிக்கன் சர்ச். பல அரிய, நினைவு பட்டகங்கள்
நிறைந்துள்ள தேவாலயம். இதில் தான் ராபர்ட் க்ளைவின்
திருமண்ம் நடந்தது ! அருகே ஒரு அழகிய பழைய
மாளிகை இப்போது மயுஸியமாக மாற்றப்பட்டுள்ளது.
பல அரிய சித்திரங்கள், ஆயுதங்கள், ஆவணங்கள்
உள்ளன.

4.எக்மோர் மயுஸியம்.

5.காமராஜர் நினைவு இல்லம், தி.நகர் : காமராஜர்
கடைசியாக வசித்த வீடு. அரிய புகைப்படங்களும்,
ஆவணங்களும் உள்ளன. தி.நகரில்தான் எம்.ஜி.ஆர்
நினைவு இல்லமும உள்ளது.

5. வழிபாட்டு ஸ்தலங்கள் : திருவல்லிக்கேணி
பார்தசாரதி கோவில், மைலாப்பூர் கபாலீஸ்வரர்
கோயில், சாந்தோம் தேவாலயம், கதீட்ரல் ரோடில்
இருக்கும் மிகப்பெரிய கதிட்ரல் ; பூந்தமல்லி
நெடுஞ்சாலையில் இருக்கும் மிக அழகிய
செயின் ஆண்ட்ரூஸ் கிர்க்..

6.வணடலூர் மிருககாட்சி சாலை மற்றும்
கடற்கரைகள்.

7. ஓமந்தூரார் எஸ்டேட் எனப்படும் அரசாஙக் இடத்தில்
அமைந்துள்ள பிரமான்டமான் ராஜாஜி மாளிகை ; 1
800 வாக்கில் ராபர்ட் க்ளைவின் மகன் எட்வர்ட்
க்ளைவில்னால் கட்டப்பட்ட விருத்தினர் மாளிகையே
இது. 1947வரை பிரிடிஷ் கவர்னர்கள் வசித்த இடம்.
அருகில்தான் எம்.எல்.ஏ விடுதிகள் அமைந்துள்ளன.

சென்னை புத்தக கண்காட்சியில் சில 'முரண்பாடுகள்' Options

சென்னை புத்தக கண்காட்சியில் அனைத்து வகை
'சிந்தனைகளும்' (அல்லது சித்தாந்தங்களும்) அருகருகே
கடை விரித்திருப்தே ஒரு நகைமுரண்.

தீவிர இந்து சமய சிந்தனை / பக்தி / ஆன்மீகம் (உ.ம் :
ராமகிருஷ்ண மடம், ஈசா யோகா) கடைகளுக்கு அருகே
பெரியாரிய / திராவிட சிந்தனைகள் !!

தீவிர இடதுசாரி / கம்யூனிச புத்தக கடைகளுக்கு எதிரே
சந்தை பொருளாதாரம் / மேலான்மை சம்மந்த பட்ட
புத்தகங்கள் !! ஜோதிட புத்தகங்கள்.

இஸ்லாமிய புத்தகளுக்கு சற்று தொலைவில் ஆர்.எஸ்.எஸ்
வகையிரா புத்தகங்கள்..

சேகுவாரா வரலாறு புத்தகங்கள் விற்க்கும் கடையிலே
பிஸினஸ் மேனெஜ்மென்ட் / மார்க்கட்டிங் புத்தங்களும்
வைக்கப்பட்டிறுக்கும் முரண் !!!

சற்று பிரமிப்பை ஏற்படுதினாலும், இந்த முரண் சிரிபை
வரவழைக்கிறது.

ஒரு பழைய பாடலின் வரி :

..everyone selling their wares,
selling soap, selling prayers....

யாராவது ஒரு புதுக்கவிதை புனையலாமே இதை பற்றி !!!!

உ.வே.சாமினாதையரின்ன் 'எனது சரித்திரம்'

தமிழ் தாத்தா உ.வே.சா வின் சுயசரிதை மிக சுவாரசியமான, 19ஆம் நூற்றான்டின்
வாழ்கை முறையை சித்தாரிக்கிறது. அவரது எளிய நடைக்கு ஒரு சாம்பிள் :

..'இதுதான் எங்கள் ஊர். இப்போது உள்ள உத்தமதானபுரத்துக்கும்
'எங்கள் ஊர்' என்று பெருமையோடு நான் எண்ணும் உத்தமதானபுரத்துக்கும்
எவ்வளவோ வேறுபாடு உண்டு. என் இளமை காலத்தில் இருந்த எங்கள் ஊர்தான் என்
மனதில் இடங் கொண்டிருக்கிறது. இந்த காலத்தில் உள்ள பல சௌரியமான
அமைப்புகள் அந்த காலத்தில் இல்லை ; ரோடுகள் இல்லை ; கடைகள் இல்லை ;
உத்தியோகஸ்தர்கள் இல்லை; ரெயிலின் சப்தம் இல்லை. ஆனாலும், அழகு இருந்தது;
அமைதி இருந்தது; ஜன்ங்களிடத்தில் திருப்தி இருந்தது; பக்தி இருந்தது.
அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி நிலவியது ; வீடுகளில் லக்ஷ்மீகரம்
விளங்கியது...'

இவ்வாறு 1940ல் எழுதுகிறார். !!

திருவாடுதுறை ஆதினத்தின் ஆதரவில் வளர்ந்து, மாயூரம் மீனாட்சிசுந்திரம்
பிள்ளையிடம் தமிழ் கற்று, பல அரிய தமில் இலக்கியங்களை தேடி அலைந்து
பதிப்பித்த சான்றோர் அவர். சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம் போன்ற பல
முக்கிய காப்பியங்களை தேடி பதிபித்த வரலாறு, அனைவரும் படிக்க வேண்டிய ஒரு
ஆவணம்.

டாகடர். உ.வே.சாமினாதையர் நூல் நிலையம், பெசன்ட் நகர், சென்னை - 90. ரூ.
160 பக்கம் : 776

மெட்ராஸ் - சென்னை, சில சுவாரசியாமான சரித்தர தகவல்கள்

மெட்ராஸ் - சென்னை, சில சுவாரசியாமான சரித்தர தகவல்கள் :

சாந்தோம் பகுதியில் வசித்த, டி-மேடரியா என்ற போர்சிகிசிய குடும்பத்திடம்
கிழக்கிந்திய கம்பேனி அதன் ஆரம்ப காலங்களில் (1660ல்) கடன் வாங்கியது.
அக்குடும்பமே அக்காலத்தில் மிக பெரிய, செல்வாக்கான குடும்பம். என்வே
அவர்களின் நினைவாக மெட்ராஸ் என்று பெயர் வந்ததாக ஒரு தகவல்.
யேசு கிருஸ்துவின் நேரடி சீடரான புனித தாமஸ் 2000 வருடங்களுக்கு முன்
இங்கு வந்து வசித்தார். அவர் பிராச்சாரம் செய்த குன்றே சென்ட் தாமஸ்
மௌண்ட் (விமான நிலையம் அருகே உள்ளது). கோட்டையிலிருந்து ஆங்கிலேயர்கள்
அதற்கு போட்ட சாலையே மௌண்ட் ரோட். போர்சிகீசில்
செயின்ட் தாமஸ் என்பது சாந்த் தோம் ஆனது. அங்கேதான்
புனித தாமஸ் புதைக்கப்பட்டார்.

1670களில் எலிகு யேல் என்னும் ஆங்கிலேயர் மெட்ராஸ் கவர்னராக பல ஆண்டுகள்
இருந்தார். பிரிட்டிஷ் பகுதியின் எல்லையய் விரிவு படுத்தினார். அப்போது
இந்தியாவின் சக்ரவர்தியாக இருந்த அவுரங்கசீபின் கீழ் இருந்த
கோல்கொன்டா சுல்தானிடமிருந்து, திருவல்லிக்கேணி, தொன்டயார்பேட்டை,
எழும்பூர், போன்ற 'கிராமங்களை' ஆங்கிலேயருக்காக விலைக்கு வாங்கினார்.
பின்னர் பணியிலிருந்து ஓய்வு பெற்று அமேரிக்கா சென்று அங்கு
கனெக்டிக்கட் பகுதியில் வாழ்ந்தார். அங்கு ஒரு பள்ளிக்கு தனது செத்தில்
ஒரு பகுதியய் தானமாக அளித்தார். அது வளர்ந்து இன்று புகழ் பெற்ற யேல்
பல்கலைகழகமாக திகழ்கிறது.

சின்ன தறிகள் உடைய நெசவாளர்கள் வாழ்ந்த இடமே இன்று சிந்தாதரிப்பேட்டை.
ஆற்காடு நவாபின் குதிரை லாயம் இருந்த பகுதிதேன் இனறைய கோடம்பாக்கம் (கோடா
என்றால் குதிரை என்று இந்தியில் அர்த்தம்). நவாப், சையத்கான் என்ற தன்
திவானிற்கு தானமாக அளித்த பகுதியே இன்றய சையதாபேட்டை.
ஏரி மற்றும் பனை மரங்கள் நிறைந்த பகுதியே நுங்கம்பாக்கம் (நுங்கு) ; லேக்
ஏரியா ; செங்கல் சூலைகள் இருந்த பகுதியே இன்று சூலைமேடு மற்றும் சூலை
ஆகும்.

ஏழு ஊர்கள் சேர்ந்த பகுதியே எழும்பூர் ஆனது. தோல் ஆடைகளை சாயமிட்ட இடமே
இன்றய வண்ணாரப்பேட்டை. பீட்டரின் தமிழாக்கமே ராயர் ; ராயப்பேட்டை மற்றும்
ராயபுரம்.

கோட்டைக்குள் இருக்கும் சென்ட் மேரிஸ் சர்ச், மிக பழமை வாயந்தது.
ஆங்கிலேயரின் முதல் தேவாலயம் அது. ஆங்கிலேய ஆட்சிக்கு விதிட்ட ராபர்ட்
களைவின் திருமணம் இங்குதான் நடந்தது....