தொண்டடிப்பொடிய்யாள்வார் வைபவம்' :
'ஷ்ரீயப்பதியாய் ஸிம்லாச் சிகரத்தில் எழுந்தருளாநின்ற
அரசாங்க ஈச்வரன் வில்லிங்டன் மூர்த்தி' யை நோக்கிப்
பாடிய பதக்கதிலிருந்து சில :
உற்றாரை யான் வேண்டேன், ஊர் வேண்டேன், பேர் வேண்டேன்,
மற்றுமிந்த வாணிபத்தின் புன்செல்வம் யான் வேண்டேன்
பொற்றோளாய் ! உன்னுடைய பெருமை மிகு சர்வீஸில்
சிற்றுருவ மானதொரு அட்டெண்டர் ஆகேனோ !
ஊனேறு செல்வத்துடன் பிறவி யான் வேண்டேன்
தேனார் மொழிக் கிள்ளைத் தேவியரும் யான் வேண்டேன்
வானோங்கு புகழ்மிகுந்த நின்வாயி லிட்டுண்ணும்
மீனாய்ப் பிறக்கும் தவமுடைய னாவேனோ.
-----------------------------------------------------------------
மூலம் : 'அந்தக் காலத்தில் காப்பி இல்லை'
ஆ.இரா.வேங்கிடாசலபதி, காலச்சுவடு பதிப்பகம்.
test
ReplyDeleteஎந்த கண்ணாடியில்
ReplyDeleteபார்த்தாலும்- எனது
வலது கரம்
இடப்பக்கமாகவே தெரிகிறது
வால்பையன்
//வானோங்கு புகழ்மிகுந்த நின்வாயி லிட்டுண்ணும்
ReplyDeleteமீனாய்ப் பிறக்கும் தவமுடைய னாவேனோ.//
மீனை தவிர வேறெதுவும் அவர் சாப்பிட மாட்டாரா?
வால்பையன்