Tuesday, May 20, 2008

சுஜாத்தாவின் 'பதினாலு நாட்கள்'

சுஜாத்தாவின் 'பதினாலு நாட்கள்'

1971 பங்களாதேச விடுதலை போரை பற்றிய அருமையான சிறு நாவல். சுஜாத்தாவிற்கே
உரிய அருமையான நடை.

எதிரிகளிடம் சிக்கிய ஒரு இளம் இந்திய விமானியய் பற்றிய கதை.

முக்தி பாகினி இளைஞன் ஒருவனைப் பற்றிய வரி என்றும்
மறக்க இயலாது. :

....ரத்த வெள்ளத்தில் பிறக்கப்போகும் ஒரு புதிய சகாப்த்ததின்
ஆரம்ப வரிகள் அவன் முகத்தில் எழுதப்பட்டிருந்தன. எத்தனை
ஆர்வம் !..'

இதில் மேலும் சில வரிகள் :

ஜுல்பிகார் அலி பூட்டோ ஆயிரம் வருஷ்ம் போரடுவோம்
என்று சொன்ன போர் சரியாக பதினாலு நாட்களில் முடிந்தது. ஆயிரக்கணக்கில்
இந்தியர்கள் இறந்த பதினாலு நாட்கள்.
எத்தனையோ வாழ்நாட்க்களை, எத்தனையோ ஆசைகளை,
தாபங்களை, இளம் அரவணைப்புகளை அணைத்த
பதினாலு நாட்கள்...

"எதை எழுதுவீர்கள் நீங்கள் ? யாரைப் பற்றி எழுதினாலும்
போதாதே. இன்ஞினியர்களைப் பற்றி எழுதுவீர்களா,
இன்பான்ட்ரி பற்றியா, மெடிக்கல் கோர் பற்றியா,
விமானிகள் பற்றியா, கன்னர்கள் பற்றியா, கடற்படை
பற்றியா, ஜெனரல்களைப் பற்றியா, இல்லை அந்தத்
தேசத்தில் மொனமாக மாண்ட லட்சக்கணக்கான
ஜனங்களைப் பற்றியா ? யாரைப் பற்றி ?"

"உங்களைப் பற்றி" என்றேன்.

"நான் ஒரு சாதாரண பைலட், ஐ டிட் மை ஜாப்"
என்றான் அவன்.

1 comment:

  1. நான் கூட படித்து சிலிர்த்திருக்கிறேன்.,

    பதிவிட்டமைக்கு நன்றி

    ReplyDelete