Friday, October 31, 2008

சதாம் ஹுசேன், செர்பியா,ஆஃப்கானிஸ்தான், அமெரிகாவின் போர்கள், டாலர் அரசியல் மற்றும் இன்ன பிற...

எப்படி சோவியத் ரஸ்ஸியா உண்மை கம்யூனிசம் அல்ல
என்று தோழர்கள் சொல்கிறார்களோ அதே போல்தாம்
அமெரிக்கா உண்மையான சுதந்திர பொருளாதார
கேபிடலிசத்தின் சின்னம் அல்ல. நார்வே, ஜெர்மனி
போன்ற நாடுகளை சொல்லாம்.

அமெரிக்காவின் பல போர்கள் மற்றும் ஆதிக்கம் செலுத்த முயற்சிகள் : இவை
அமெரிக்கா பற்றிய ஒரு வெறுப்பை பெரும்பாலோனவர்ககளிடம் தோற்றுவித்து
உள்ளதுதான்.
கோல்ட் வார் எனப்படும் மறைமுக யுத்தம் சுமார் 45 வருடகாலாம் அமெரிக்கா
மற்றும் இதர ஜனனாயக முதலாளித்துவ நாடுகளுக்கும் சோவியத் ரஸ்ஸியா
மற்றும் அதன் துணை (அல்லது அடிமை) நாடுகளுக்கும்
இடையே நடந்தது. இதன் அடிப்படையில்தாம்
அமெரிக்காவின் செய்ல்களை எடைபோட வேண்டும்.
இன்று அனைவரும் சோவியத் ரஸ்ஸியா, கிழக்கு அய்ரோப்பாவில் (செக், ஹங்கேரி,
போன்றவை) மற்றும் ஆஃப்கானிஸ்தான், எகிப்து, சிரியா போன்ற நாடுகளில் செய்த
ஆதிக்கத்தை மற்றும் அயுத சப்பளை மற்றும் உதவிகளை மறந்து விட்டார்கள்.
அதற்க்கு மாற்றாக அமெரிக்கா மற்றும் நேடொ நாடுகள் அதே பாணியில்
செயல்பட்டன. இரண்டும்
ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தாம். இஸ்ரேல்
உருவாக்கப்பட்ட அய்.நா சபை ஓட்டேடுப்பில் காம்ரேட் ஸ்டாலினின் சோவியத்
ரஸ்ஸியாவும் இஸ்ரேலுக்கு
ஆதரவாக 1948இல் வாக்களித்தை காம்ரேடுகள் இன்று சொல்லுவதில்லை. இஸ்ரேலை
அடியோடு அழிக்க
எகிப்த்து மற்றும் இதர அரேபிய நாடுகள் கடும் முயற்சி
செய்த போது அமேரிக்கா இஸ்ரேலை ஆதரித்தது. இதற்க்கு போட்டியாக பின்னர்
ரஸ்ஸியா எகிப்த் மற்றும் சிரியாவை கண்மூடித்தனமாக ஆதரித்தது. இதன்
விளைவுகள் இன்றும் தொடர்கிறது.

அமெரிக்க செய்வதை நியாப்படுத்தவில்லை.
தெளிவுபடுத்துகிறேன்.

1990க‌ளில் ப‌ழைய‌ யூகொஸ்லோவிய‌ ப‌குதிக‌ளில்
கிருஸ்த‌வ‌ செர்பியா இஸ்லாமிய‌ போஸ்னியர்க‌ளை
கொன்றழித்து செய்த‌து. உல‌க‌ நாடுக‌ள் அனைவ‌ரும்
(ர‌ஸ்ஸியா நீங்க‌லாக‌, ஏனெனில் அவ‌ர்க‌ள் செர்பிய‌ர்க‌ளின்
உட‌ன் ப‌ங்காளிக‌ள்) செர்பியாவை க‌ண்டித்த‌ன‌. அய்.நாவில் நியாய‌ம்
கிடைக்காம‌ல் ர‌ஸ்ஸியா வீட்டோ அதிகார‌த்தை உப‌யோகித்த‌து. இன‌ப்ப‌டுகொலை
(இதில் க‌வ‌னிக்க‌ வேண்டிய‌ விசிய‌ம் : இஸ்லாமிய‌ர்க‌ள் பெரும் அள‌வில்,
கிருஸ்துவ‌ செர்பிய‌ர்க‌ளால், கொடிய‌வ‌ன் மிலாஸ‌விச் த‌லைமையில்
கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர்) தொட‌ர்ந்த‌து. சாம‌, பேத‌, தான், த‌ண்ட‌ம் :
இவை அனைத்தையும் நேடோ நாடுக‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தி
க‌டைசியில் 1999இல் செர்பியா மீது க‌டும் குண்டு ம‌ழை
பொழிந்து அத‌ன் பொருளாதார‌த்தையும், ராணுவ‌ அணிக‌ள‌ன்க‌ளையும் அழித்து,
செர்பியாவின்
கொடுங்கோல்க‌ளை நிறுத்திய‌து. அப்போதும் அமெரிக்க‌ எதிர்பாளர்க‌ள்
வ‌ழ‌க்க‌ம் போல் 'எதிர்த்த‌ன‌ர்.'

http://en.wikipedia.org/wiki/Bosnian_War#War_crimes

அது ஒரு இனப்படுகொலை. ethnic cleansing.

http://en.wikipedia.org/wiki/Bosnian_Genocide

இஸ்லாமிய மக்களுக்கு எந்த அரசியல் நோக்கம்
இல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்காவும்,
இதர நெடோ நாடுகளும் 1999இல் உதவின. கிருஸ்துவ செர்பியர்களின் ஆதிக்கத்தை
எதிர்த்து..

அமெரிக்கா இஸ்லாமிய‌ர்க‌ளுக்கு எதிரான‌து அல்ல
என்ப‌தை நிருப்பிக்க‌ இதை பெரிதாக‌ பிராச்ச‌ர‌ம்
செய்திருக்க‌ வேண்டும். ப‌ல‌ ஆண்டுக‌ளுக்கு முன் நான்
அமெரிக்க‌ வெளியுற‌வு துறைக்கு இந்த‌ 'பிரச்சார‌' அவ‌சிய‌ம்
ப‌ற்றி ஒரு மின்ம‌ட‌ல் அனுப்பினேன். !!

1979வரை ஆஃப்கானிஸ்தான் ஒரு அமைதியான,
வளமான நாடாகாக இருந்தது. இஸ்லாமிய தீவிரவாதம்,
அல் கொய்தா, தலிபான் எல்லாம் இல்லை. அமைதியான
மக்கள், நிம்மதியாக வாழ்ந்தனர். சோவியத் ரஸ்ஸியா
தன் தென் எல்லையில் அமைந்த நாடானான ஆஃகானிஸ்தானுக்கு 'புரட்சி' அய்
'ஏற்றுமதி' செய்ய
முயன்று, இறுதியில் படை எடுத்தது. ஆஃப்கானிஸ்தானுகு
அன்று பிடித்தது சனி. ர‌ஸ்ஸிய ஆக்கிரமிப்பை, கடும் அடக்குமுறைகளை
எதிர்க்க முஜாகுதின் படைகளை பாக் உதவியுடன் அமெரிக்கா ஊக்குவித்தது. பின்
லேடன்
சவுதியில் இருந்து ஆஃப்கானிஸ்தான் சென்று, அமெரிக்க உதவியுடன்
ர்ஸ்ஸியார்களை எதிர்த்து போராடினார்.
பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு முக்கிய நேச நாடு
மற்றும் தளமாக, ரஸ்ஸியர்களை எதிர்க்க ஒரு தடுப்பரணாக இருந்த்து. 10
ஆண்டுகளில் ரஸ்ஸியா தோற்று பிறகு
1991இல் வீழ்ந்தது. ஆனால் கிணறு வெட்ட பூதம்
கிளம்பிய கதையாக, இஸ்லாம் பெயரில் ஊக்குவிக்கப்பட்ட முஜாகுதீன் மற்றும்
பின் லேடன் பலமாக வளார்ந்து
இன்றும் பெரும் பிரச்சனையாக, ஆஃப்கானிஸ்தானுக்கும்,
உலகத்திற்க்கும் விளங்குகிறது.

அதே போல் 1979 வரை ஈரான் மன்னர் ஷா ஆட்சியில்
அமெரிக்க ஆதரவாளியாக, (அதாவது ரஸ்ஸிய எதிர்பில்) அமைதியாக இருந்த நாடு.
அயோத்துள்ளா கோமெனியின்
'புரட்சி' 1979இல் உருவாகி இஸ்லாமிய அரசு உருவாகி, அமெரிக்கர்களை
ஈரானிலிருந்து துரத்தி, அன்றிலிருந்து
ஈரான் ஒரு அமெரிக்க 'எதிர்பாளாராக' வளர்ந்தது. மதவாத தீவிரவாத்தை
ஊக்குவிக்கும் நாடாக உருமறியது. ஈராக்கின்
சர்வாதிகாரி சதாம் ஒரு கொடுங்கோலந்தான். அவன் தன் மக்களை, பல லச்சம்
பேர்களை ஈவிரக்கமில்லாமல்
கொன்றவன். எதிர்தவர்களை எல்லாம் பூண்டோடு அழித்தவன். ஆனாலும் அவன் ஒரு
மதசார்பற்றவன். மேலும் இஸ்லாமிய மதவாதிகள் வலுவாகா இராக்கில்
உருமாறினால், தன் அதிகாரத்திற்க்கு ஆபத்து என்று ஜாக்கரதையாக இருந்தான்.
மேலும், அரேபிய சன்னி முஸ்லிமான சதாம், இராக்கின் பெருவாரியான ஷியா
பிரிவு இஸ்லாமியர்களை
இரும்புக்கரம் கொண்டு அடக்கி வைத்திருந்தான். ஈரானில் உருவான ஷியா
மதவாதம் மற்றும் வளர்சி ,இராக்கில்
உள்ள பெருவாரி மக்களான ஷியாக்களையும் ஈர்த்து தன் அதிகாரத்திற்க்கு
ஆபத்து வரும் என்று நினைத்து 1980இல்
ஈரான் மீது படை எடுத்தான். 8 ஆண்டுகள் கடும் போர்.
பெரும் உயிர்பலி மற்றும் சேதம். 'எதிரிக்கு எதிரி நண்பன்'
என்ற (முட்டாள்தனமான, விவேகமில்லாத) தத்துவத்தின் அடிப்படையில் அமெரிக்கா
சதாமை ஊக்குவித்து
உதவியது. பிறகு அனுபவித்தது, வழக்கம் போல்!!

1990இல் சதாம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டதால்,
எண்ணை வளம் மிகுந்த சிறிய நாடான குவைத் மீது
படை எடுத்து ஆக்கிரமித்தான். சவுதி மீதும் படை
எடுப்பேன் என்று மிரட்டினான். உடனே அமெரிக்கா
மற்றும் அதன் நேச நாடுகள், விரைவாக களத்தில்
இறங்கி, கடும் போரில் ஈடுபட்டு குவைத்தை
விடுவித்தன. 1991இன் ஆரம்பத்தில் குவைத்தை
முற்றாக விடுவித்த அமெரிக்க மற்றும் இதர
படையுனர், ஒரு முக்கிய காரணத்திற்காக சதாமை
அழிக்காமல், ஈராக்கின் ராணுவ பலத்தை முற்றாக
அழிக்காமல், வேண்டும் என்றே விட்டு வைத்தனர்.
வலுவான மதவாத ஈரானை எதிர்காலத்தில் தடுக்க
ஒரு அரணாக ஒரு வலுவான் ஈராக் தேவைபட்டது.
(to maintain the 'balance of power' and to contain Iran. Strategic
calculations...)முக்கியமாக சதாம் போன்ற ஈரானை
எதிர்க்கும் ஒரு சர்வாதிகாரி தேவை பட்டது.
இல்லாவிட்டால் 1992இல் லேயே சதாமின் கதை
முடிந்திருக்கும்.

வழக்கம் போல அமெரிக்கர்கள் தப்புகணக்கு
போட்டனர். சதாம் அணு ஆயுதங்கள் மற்றும்
பேரழிவு ஆயுதங்களை குவிப்பதாக பலமான
சந்தேகம். பொருளாதார தடை. இருந்தும் ஒரு
வில்லனை ஒழிக்க காரணாங்கள் அதிகம் இன்று
புஸ் ஜூனியர் அன்ட் கம்பேனி படை எடுத்து
இன்று மாட்டியுள்ளனர். அதே தப்புக்கணக்குதான்.
தலைவலி போய் திருகுவலி வந்த வரலாற்றில்
இருந்து இன்று வரை அமெரிக்கர்கள் ஒரு
பாடமும் கற்றதாக தெரியவில்லை.

ஈராக் படை எடுப்பில் சதாம் மற்றும் அவனின்
ஃபாத்தா கட்சி அழிக்கபட்டது மிக சரியான,
நல்ல விசியம். அத்தோடு அமெரிக்கர்கள்
வெளியெறி, அங்கு இனச்சண்டை (ஷியா, சன்னி
மற்றும் குர்த் இனதவர்களுக்குள்) உருவாகாமல்
இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்தான்.

சதாம் ஹூசைன் சுமார் 24 வருடங்கள் ஈராக்கை
ஆண்ட கொடியவன். கண்டிப்பாக ஒரு ஹீரோ
அல்ல. குர்த் இன மக்கள் மீது விச வாய்வை
செலுத்தி கொன்றவன். மிக மிக குரூரமான கொடுங்கோலன்.அவனை பற்றி முழு விவரங்கள்
அறிய :

http://www.hrw.org/reports/1993/iraq/

http://en.wikipedia.org/wiki/Human_rights_in_Saddam%27s_Iraq

http://www.amnesty.org/en/library/info/MDE14/008/2001

ஆனால் அவன் ஒரு மதவாதி அல்ல. செக்யூலார்
கொடுங்கோலன் :

http://en.wikipedia.org/wiki/Saddam_Hussein#Secular_leadership


http://en.wikipedia.org/wiki/Al-Anfal_Campaign

http://en.wikipedia.org/wiki/Al-Anfal_Campaign#Violation_of_human_rights

http://en.wikipedia.org/wiki/Halabja_poison_gas_attack

......Various U.S. diplomats and intelligence officials have asserted
that Saddam was strongly linked with the CIA, and that U.S.
intelligence, under President John F. Kennedy, helped Saddam's party
seize power for the first time in 1963.[15][16]

Saddam Hussein in the past was seen by U.S. intelligence services as a
bulwark of anti-communism in the 1960s and 1970s.[16] His first
contacts with U.S. officials date back to 1959, when he was part of a
CIA-authorized six-man squad tasked with ousting then Iraqi Prime
Minister Abdul Karim Qassim.[17]
.....

http://www.guardian.co.uk/world/2002/oct/24/iraq.comment

சாதாம் ஹூசெனின் ம‌க‌ன்க‌ளும் கொல்ல‌ப்ப‌ட்ட‌தை
ப‌ற்றி எழுதியிருந்தீர்க‌ள். அவ‌ர்க‌ள் இருவ‌ரும் செய்த‌
கொலைக‌ள், ரேப்க‌ள் ம‌ற்றும் அட்டூலிய‌ங்க‌ள் ப‌ற்றி
ஒரு புத்த‌க‌மே எழுத‌லாம்.

பார்க்க‌ :

http://en.wikipedia.org/wiki/Uday_Hussein

http://en.wikipedia.org/wiki/Qusay_Hussein

மருமகன் :
http://en.wikipedia.org/wiki/Hussein_Kamel

விக்கிபீடியா சுட்டிக‌ளையே த‌ருகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம். நீங்க‌ள்
அமீர‌க‌த்தில் வ‌சிப்ப‌தால், அங்கு
யாராவ‌து இராக் அக‌திக‌ளிட‌ம் நேரில் விசாரித்துப்
பாருங்க‌ள். வன்கொடுமைகள் என்றால் என்னவென்று அனுபவபப்பட்டவர்கள்
சொன்னால் தெரியும்...

சதாமின் மகள்கள் மற்றும் மனைவியர் பத்திரமாக
இருக்கின்றனர். மகன்கள் இருவரும் போரில் அல்லது என்கவுன்டரில்
கொல்லப்பட்டனர். சதாம், தன் இரு மருமகன்களையும் எந்த முறையில் கொன்றானோ,
அதே முறையில் தான் அவனின் இரு மகன்களும்
சண்டையில் கொல்லப்பட்டனர், சரணடைய
மறுத்தால்

http://en.wikipedia.org/wiki/Uday_Hussein#Allegations_of_crimes_or_misconduct

காலின் கிளார்க் அவர்களின் கருத்துக்களுக்கு மாற்று இதோ :

http://www.atimes.com/atimes/Middle_East/HC10Ak01.html
http://www.econbrowser.com/archives/2006/01/strange_ideas_a.html
http://www.atimes.com/atimes/Middle_East/HA21Ak01.html
http://en.wikipedia.org/wiki/Petrodollar_warfare#Critical_views

2000 தேர்தலில் சொற்ப வாக்குகளில் அல் கோர் (டெமொக்ரட் கட்சி)
தோற்க்காமல் வென்றிருந்தால், கண்டிப்பாக ஈராக் மீது
படை எடுத்திறுக்கமாட்டார்கள்..

டாலர் உலக வர்த்க கரன்சியாக தொடர்வதும், சதாமின் முயற்சிகள் பற்றியும்,
பொருளாதார‌ நிர்ப‌ந்த‌ங்க‌ள் எந்த‌
அளவு அமெரிக்காவை இராக் போரை துவ‌க்க‌
கார‌ணியாக‌ இருந்த‌ன‌ என்ப‌து ப‌ற்றியும் மிக‌ மிக‌
தெளிவாக‌, ஆதார‌பூர்வ‌மான‌ சுட்டி இது :
பொறுமையாக‌, முழுசா ப‌டித்து பாருங்க‌ள்..

http://web.nps.navy.mil/~relooney/Rel_MEJ_S04.pdf

Thursday, October 30, 2008

தொலைவிலிருந்து பார்க்கும் போது, நீ என் நண்பனைப் போல் தோன்றுகிறாய்.....

எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஆங்கில பாட்டின் தமிழாக்கம் :

....தொலைவிலிருந்து பார்க்கும் போது நீ என் நண்பனைப் போல் தோன்றுகிறாய்,
ஆனால் நாம் யுத்த களத்தில் இருக்கிரோம்.

தொலைவிலிருந்து பார்க்கும் போது இந்த யுத்தம் எதற்க்கு என்று எனக்கு புரியவிலை..

http://www.youtube.com/watch?v=i5_YAj9lCQc

http://www.youtube.com/watch?v=aDSh5wUtXt4


FROM A DISTANCE

(Julie Gold)

From a distance the world looks blue and green
And the snow-capped mountains white
From a distance the ocean meets the stream
And the eagle takes to flight

From a distance there is harmony
And it echoes through the land
It's the voice of hope, it's the voice of peace
It's the voice of every man

From a distance we all have enough
And no one is in need
There are no guns, no bombs, no diseases
No hungry mouths to feed

From a distance we are instruments
Marching in a common band
Playing songs of home, playing songs of peace
They're the songs of every man
God is watching us, God is watching us
God is watching us from a distance

From a distance you look like my friend
Even though we are at war
From a distance I can't comprehend
What all this war is for

From a distance there is harmony
And it echoes through the land
It's the hope of hopes, it's the love of loves
It's the heart of every man

It's the hope of hopes, It's the love of loves
It's the song of every man

http://en.wikipedia.org/wiki/From_a_Distance

Saturday, October 18, 2008

கீதாசாரம் : 'எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது' !

கீதாசாரம்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

வ‌ராக்க‌ட‌னை கொடுத்த‌ அன்ப‌ர்க‌ள் இதை பார்த்து பெருமூச்சு விட்டு
ஆறுத‌ல்டைய‌வ‌து எங்க‌ ஊர் வ‌ழ‌க்கம். அத்தனை Finance கம்பேனிகளிலும்
இது ஃபேரெம் செய்து மாட்டப்பட்டிருக்கும்.

அமேரிக்காவிற்க்கும் இதை ஏற்றுமதி செய்யாலாமே ? !!

:))

Tuesday, October 14, 2008

மனித இனம் அழியுமா ?

மனித இனம் அழியுமா ?

சூரியனின் ஒளி மற்றும் வெப்பம் தான் பூமியில்
வசிக்கும் உயிர்களின் வாழ்வாதாரம். (solar energy) ;
சூரியனும் ஒரு ந‌ட‌ச்த்திர‌ம் தான். அது இன்னும் சுமார்
500 கோடி ஆண்டுக‌ளில் எரிந்து முடிந்து அழிந்து விடும்.
அத‌ற்க்கு முன் ஒரு சிக‌ப்பு ராட்ச‌னாகி (Red giant) பின்ன‌ர்
ஒரு க‌ருங்குழியாக‌ (black hole) இறுதியில் அணையும்.

சூரிய‌ன் இல்லாம‌ல் க‌ண்டிப்பாக‌ பூமியில் உயிர் இல்லை.
என‌வே ?

இன்னும் ஒரு 100 ஆண்டுக‌ளில் பெட்ரோலிய‌ம் சுத்தமாக‌ தீர்ந்துவிடும்.
மாற்று வ‌ழிக‌ள் ம‌ற்றும் எரிபொருள்க‌ள் வ‌ந்துவிடும்தான். ஆனால்
பிளாஸ்டிக்ஸ், உர‌ம்,
போன்ற‌வை எங்கிருந்து எவ்வாறு ம‌லிவாக‌ செய‌வ‌து ?

அனைத்து உலோக‌ங்கள் (இரும்பு, காப்பர், போன்றவை)
ம‌ற்றும் நில‌க்க‌ரிக‌ளும் இன்னும் சுமார் 500 முத‌ல் 1000
ஆண்டுக‌ளுக்குள் வெட்டி எடுக்க‌ப்ப‌ட்டு தீர்ந்துவிடும்.
பிற‌கு recylcing தான். new demand and costs ?

எதிர்கால‌ம் எப்ப‌டி ?

Saturday, October 11, 2008

'பார்பன சேவை' என்றால் என்ன ? (ப‌ழம்பெரும் கலைஞர் கே.பி.சுந்தராம்பாள் 'பார்பன சேவை' புரிந்ததாக எழுதும் ந‌ணப்ர் மதிமாறன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல் )

ப‌ழம்பெரும் கலைஞர் கே.பி.சுந்தராம்பாள் 'பார்பன சேவை' புரிந்ததாக
எழுதும் ந‌ணப்ர் மதிமாறன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல் :

http://mathimaran.wordpress.com/2008/08/04/

நண்பர் மதிமாறன் அவர்களே,

எனது முந்தைய பின்னோட்டங்களை நீங்கள் ஏன
வெளியிட ம‌றுக்குறீர்கள் என்று புரியவில்லை.
இறுதியாக ஒரு கருத்து :

பார்பன சேவை என்றால் என்ன ? அது என்ன என்பதை
பற்றி உங்கள் கருத்துக்கள்தாம் இறுதியானது என்று
கருதினால் அது பகுத்தறிவல்லவே.

///தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் கிட்டப்பாவின்
முதல் குடும்பத்தாரிடம் இழந்தார். வறுமையில் சிக்கினார். மீண்டும்
பார்ப்பன சேவையில் ஈடுபட்டு வசதியான
நிலைக்கு உயர்ந்தார்.////

இது ச‌ற்றும் நாக‌ரீக‌மில்லாத‌ க‌ருத்துக்க‌ள். கே.பி.எஸ்
அவ‌ர்க‌ளின் முழு வாழ்க்கை வ‌ர‌லாற்றையும்
ப‌டித்திருக்கிறீர்க‌ளா. 3, அல்ல‌து 4 நூல்க‌ள் வ‌ந்துள்ளன‌.
சென்ற‌ ஆண்டு உயிர்மை இத‌ழிலும் வ‌ந்துள்ளது.
அவ‌ர் கிட்ட‌ப்பாவை ம‌ன‌தார‌ காத‌லித்தார். நேசித்தார்.
அது உங்க‌ளுக்கு பார்ப‌ன‌ சேவையாக‌ தெரிகிறதா ?
காதல், அன்பு, சுயனல்லமில்லாமல் வாழ்தல் :
இவை பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா ? கிட்ட‌ப்பா
அவ‌ரை ச‌ரியாக‌ ந‌ட‌த்த‌வில்லை. குடித்து அழிந்தார்.
இர‌ண்டாவ‌து திரும‌ணம் புரிந்த‌து த‌வறான‌ செய்ல்தாம். (க‌லைஞ‌ர்க‌ள்
வாழ்வில் இன்றும் இது ஒரு சாப‌க்கேடுதான்). ஆனால் கே.பி.எஸ் அவ‌ர்க‌ள்
க‌டைசி வ‌ரை மிக‌ மிக‌
அன்புட‌ன், ப‌ர‌ந்த‌ ம‌ன‌த்துட‌ன் இருந்தார். அது ஒரு குற்ற‌மா
என்ன‌ ? கிட்ட‌ப்பா பிற‌ப்பால் ஒரு பார்ப‌ன‌ர். ஆனால் ஒரு ம‌க‌த்தான‌
பாட‌க‌ர். அவ‌ரின் சாத‌னைக‌ள் ம‌றுக்க‌ப்ப‌ட‌ கூடிய‌ன‌ அல்ல‌வே.
கே.பி.எஸ் கிட்ட‌ப்பாவின் ம‌றைவிற்க்கு பிற‌கும் அவ‌ரின் பெற்றோரை பேணி
உத‌வினார் என்ப‌து உங்க‌ளுக்கு தெரியுமா? ப‌ந்த‌ம், பாச‌ம், நேச‌ம் :
இவ‌ற்றை த‌ய‌வு செய்து கொச்சை ப‌டுத்தாதீர்க‌ள்..

கே.பி.எஸ் க‌ரூர் அருகே உள்ள‌ கொடுமுடியில் பிற‌ந்து
பிற‌கு க‌ரூரிலும் வாழ்ந்தார். அவ‌ரின் த‌ம்பி என்
த‌க‌ப்ப‌னாரின் ந‌ண்ப‌ர். (நாங்க‌ளும் க‌ரூர் தான்). கே.பி.எஸ்
அவ‌ர்க‌ளின் த‌ங்கை பேர‌ன் இங்கு சென்னையில் தான்
இருக்கிறார். என‌து இனிய‌ ந‌ண்ப‌ர். ந‌ல்ல‌ பாட‌க‌ர். சிறிதும்
இங்கிதம், பண்பு இல்லாத உங்கள் 'தனி வாழ்க்கை
விமர்சனம்' மிகுந்த வருத்தையே அளிக்கிறது.

நானும் ஒரு சுய‌ம‌ரியாதை குடும்ப‌த்தில் பிற‌ந்த‌வ‌ன்தான். பெரியாரிய‌,
மார்க்ஸிய‌ க‌ருத்துக்க‌ளை ப‌டித்து வ‌ளர்ந்த‌வ‌ன்
தான். இன்று க‌ருத்துக‌ள் சில‌வ‌ற்றில் மாற்ற‌ம்
கொண்டுள்ளேன். ஆனால் உண்மையான‌ பார்ப‌னிய‌ம்
என்றால் என்ன‌ என்று எம‌க்கும் தெரியும்.

பெரியார் / அம்பேத்கார் இருவ‌ரையும் ப‌ற்றி உங்க‌ள்
பாணியில் விரிவாக‌ எழுத‌ முடியும்தான். அவ‌ர்க‌ள் செய்த‌ த‌வ‌றுக‌ள்
அல்ல‌து கூறிய‌ ஒரு சில‌ க‌ருத்துக்க‌ளை
'ம‌ட்டும்' வைத்து கொண்டு அவ‌ர்க‌ள் தேச‌ ப‌க்தி
இல்லாத‌ துரோகிக‌ள் என்று வாதாட‌லாம். ஆனால் அது
ச‌ரியான‌ / முழுமையான‌ வாத‌மாக‌ இருக்க‌ முடியாது.

பெரியாரும் சில இடங்களில் / தருணங்களில் தவறு
செய்துள்ளார். உ.ம் : 1968 டிசம்பரில் கீழ்வெண்மணி
கிராமத்தில் பல தாழ்த்ப்பட்டவர்கள் உயிருடன் கொளுத்தப்பட்டனர். அதை
கண்டிக்கும் விசியத்தில்
மழுப்பலாக இருந்தார். காரணம் அன்று அண்ணா
முதல்வர். அர்சுக்கு பெரிய பிரச்சை வராமல்
ஜாக்கிரதையாக கையாண்டார் என்றும் கொள்ளாம்.
(இதை பற்றிய சுட்டிகள் சுகுணா திவாகர் வ்லைபதிவர்
தந்தார். அவர் ஒரு மிக ஆழமான பெரியாரிஸ்ட் தான்).
1930இல் ஒரு கூட்டத்தில் சமூக போராட்டதிற்க்க ஒரு
முக்கிய தீர்மானம் போட்டு பிறகு அதை அப்படியே அம்போவென்று விட்டுவிட்டு
வெளினாடு பயணம்
செய்தார். (ஆதரம் : அ.அய்யாமுத்து : எனது நினைவுகள்) ;

அதே போல் அம்பேத்கார் பற்றி அருண் சோரி எழுதிய
புத்தகம் பார்க்கவும்.

இதை எல்லாம் ஏன் எழுதிகிறேன் என்றால், ஒரு சில
நிகழ்வுகள் / க‌ருத்துக்களை 'மட்டும்' வைத்துக்கொண்டு
ஒரு தலைவரை பற்றி இறுதி முடிவு (final assesment)
செய்வது தவறு. பெரியாரின் சாதணைகள் முன் இவை
சிறு விசியங்கள் தான்.

அதே போல் தான் அனைத்து மனிதர்களையும் எடை போட வேண்டும்.

பெரியாரும் அம்பேத்காரும் சமூக பிரச்சனைகள் (சாதியம்)
முதலில் தீர்க்காமல் சுதந்திரம் கூடாது என்றனர். ஆகஸ்டு
15 அய் கருப்பு தினமாக பெரியார் கருதினார். (அண்ணா
அவ்வாறு நினைக்கவில்லை. இதில் பெரியாருடன் முரண்
பட்டார்)

இந்தியா சுதந்திரம் அடைந்தால் ஆங்கிலேயன் இடத்தில்
வைதீக பார்பனர்கள் அமர்ந்து பார்பானியம்
வலுவடைந்துவிடும் என்று தவறாக முடிவு கட்டினார்.

ஆனால் நடந்தது வேறுதான். பார்பனியம் 1947க்கு பின் வலுவிலந்தது.
பிற்படுத்தப்பட்ட / தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
முன்பு எப்போதும் இல்லாத அளவு முன்னேர வாய்ப்பு
கிடைத்தது. இட ஒதுக்கீடு, இலவச கல்வி, சுயமரியாதை
திருமணங்கள் போன்ற பல விசியங்களுக்கு அரசின்
ஆதரவும். சட்ட ரீதியான அங்கீகாரமும் கிடைத்தது..

எந்த ஒரு தலைவரும் அனைத்து விசியங்களிலும்
சரியான நிலைபாட்டை / க‌ருத்தை வாழ்க்கை முழுவதும் கொள்வது மிக கடினம்.
தவறுகள் சகஜம்.

உலகில் எங்காவது 100 % perfect leader இருந்துள்ளரா
என்ன ? சாத்தியம் இல்லை.

Wednesday, October 8, 2008

இஸ்லாமிய சமுதாயம் முன்னேற சில யோசனைகள்

எனது தனிப்பட்ட கருத்து இது :

இஸ்லாமியர்களிடம் வறுமை, கல்லாமை மிக அதிகம்
தான். இந்திய சராசரியை விட அதிகமாகவே உள்ளது.
இதை போக்க வழிகள் :

1.குழ‌ந்தைகள பெற்ற்க்கொளவதை தாங்களே
விவேகத்துடன் கட்டுபடுத்திக் கொள்ளவேண்டும்.
மதக்காரணாம், மற்றும் ஜனத்தொகை குறைந்தால்,
இந்துக்கள் தங்களை நசுக்கிவிடுவார்கள் என்ற வீண்
பயம் போன்ற காரணிகள் சரியல்ல. ஒரு குழந்தை தான்
அரசு பரிந்துரைக்கிறது. இன்று பெரும்பாலான இதர
பிரிவினர் இரண்டு குழந்தைகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்கினரன்ர். அதுவே
சிரமம். கல்வி மற்றும்
வளர்க்க போதிய வருமானம் இல்லாமல் வாழ்க்கை போராட்டம்தான்.

2. ஆண் / பெண் இரு பாலருக்கும் திருமண வயதை தள்ளி
போட வேண்டும்.

3. கல்வியில் அவசியத்தை இஸ்லாமியர்கள் அனைவரும்
உணரச் செய்ய வேண்டியது அவர்களின் தலைவர்களின்
கடமை. முக்கியமாக பெண் கல்வியில் முக்கியத்தை.

4.நவீன விஞ்ஞானம் ,கணிதம் மதராஸாக்களில் கற்று தர ஏற்பாடு செய்ய
வேண்டும். கிருஸ்துவர்களை போல் கல்வி துறையில் இருக்கவேண்டும். சர்சு
நடத்தும் பள்ளிகளில்
நவீன கல்விதான். லாட்டின் மற்றும் மதக்கல்வி மிக
குறைவு. உருதுவில் மட்டும் படித்த சென்னை
மாணவர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள்
இந்த நவீன உலகில் ஆங்கிலம் / தமிழ் அறியாமல்
எப்படி வேலை செய்வர் ? அவர்களில் எதிர்காலம் ?
அவர்களால் மற்றவர்களோடு போட்டியிட முடியுமா ?

5.ஹாஜ் மான்யம் : வருடம் சுமார் 250 கோடிகள்
அரசினால் அளிக்கப்படுகிறது. ஒரு ஏர் டிக்கெட்டிற்க்கு
சுமார் 8000 ரூபாய், தாரளமாக பயணம் செய்பவர்களே ஏற்றுக்கொள முடியும்.
ஒரளவு வசதியானவர்களே
ப‌யணம் செய்வர். மானியம் கண்டிப்பாக மதசார்பின்மைக்கு எதிரானது தான்.
இந்த‌ 250 கோடிக‌ளை மானிய‌த்திற்க்கு அளிக்காம‌ல், வ‌ருட‌ந்தோரும் ஒரு
ஏழை இஸ்லாமியர்
அதிகம் வாழும் ஒரு ப‌த்து ப‌குதிக‌ளுக்கு 25 கோடிக‌ளாக‌
பிரித்து, அங்கே இல‌வ‌ச‌ க‌ல்வி ம‌ற்றும் ம‌ருத்துவ‌ம‌னைக‌ள்
க‌ட்ட‌ உப‌யோகிக்க‌ வேண்டும். ப‌த்து
ஆண்டுக‌ளில் இந்தியாவெங்கும் சுமார் 100 இட‌ங்க‌ளில் அருமையான‌, த‌ர‌மான‌
க‌ல்வி ம‌ற்றும் ம‌ருத்துவ‌ம‌னைக‌ள் அமைத்தால், எத்த‌னை ல‌ட்ச‌ம்
இஸ்லாமிய‌ர் ப‌ய‌ன‌டைவ‌ர் ?

6. பிற மதத்தவர்களை கண்டு பயம் / தயக்கத்தை விடுத்து, அனைவருடனும் கலந்து
பழக வேண்டும் ஒரு
கிறுஸ்துவர்களின் தேவாலயம் மற்ரும் வீடுகளுக்கு
நான் சகஜமாக சென்று உறவாடுவதை போல் ஒரு
சராசரி இஸ்லாமியரிடம் பழக முடியவில்லை.
மசூதிகளுக்குள் செல்லவே தயக்கமாக / அச்சமாக
இருக்கிறது. அனைவருடன் கலந்து பழகும் போது மனம் விரிவடையும். புதிய
சிந்தனைகள் ஓங்கும். நாடர்கள்,
கொங்கு கவுண்டர்கள், பார்பனர்கள், மார்வாரிகள் போல்
வாழ்வில் முன்னேற உழைப்பு, motivation, focus on goals,
சந்தர்பத்திர்க்கேர்ப தனனை மாற்றிக்கொள்ளுதல்
(adaptabiltiy) போன்றவற்றை கற்க வேணடும்.

No community can progress dependent only on govt support or by
blaming other groups for thir backwardness. Only progressive thinking,
broad outlook, the ability to transcend unscientific and orthodox religious
attitudes can enable any group to climb. the Jewish people are the
best example for this kind of attiude and sucess. (i am not talking
about Islrael / Palestine conflict ) ; but about the magnificient
acheivement of Israelis in turing a arid and dry desert into a
floursihing and prosperous nation in less than 50 years. While Isreal
has no oil resoureces, it is more prosperosu than neighbouring Jordan,
Syria, etc. (the Isreali aggression and violations are a different
subject ; i am here talking about the abiltiy to learn from even
'enemies')....

Tuesday, October 7, 2008

தேசம், ஞானம், கல்வி, ஈசன், பூசையெல்லாம்......

பராசக்தி (1952) சிவாஜி க‌ணேச‌ன், க‌லைஞ‌ர்
கூட்ட‌ணியில் ஒரு புதிய‌ திருப்புமுனையை
ப‌டைத்த‌ அருமையான‌ ப‌ட‌ம். (என‌து விருப்ப‌
ப‌ட‌ங்க‌ளில் / பாட‌ல்க‌ளில் ஒன்று) ;
அதில் வ‌ரும் ஒரு சூப்ப‌ர் பாட‌ல்.

எழுதியவர் : உடுமலை நாராயண கவி

தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்
காசுமுன் செல்லாதடி - குதம்பாய்
காசு முன் செல்லாதடி.
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே - குதம்பாய்
காசுக்குப் பின்னாலே.

சாட்சியான பணம் கைவிட்டுப் போனபின்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி - குதம்பாய்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி.
பைபையாய் பொன் கொண்டோர்
பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய் போகுமடி - குதம்பாய்
மெய் மெய்யாய் போகுமடி.

நல்லவரானாலும் இல்லாதவரை
நாடு மதிக்காது - குதம்பாய்
நாடு மதிக்காது.

கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே - குதம்பாய்
வெள்ளிப் பணமடியே

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே - காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே

உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே

முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பிணத்தைக்
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டிமேலே கண் வையடா தாண்டவக்கோனே

---------------------------------

இது "பணம்" படத்தில் வந்தது.

அண்ணா , என்.எஸ்.கே. போன்றவர்களுக்கு அன்று
ஆஸ்தான கவிபோல் விளங்கிய அருமையான கவிஞர்
உடுமலை நாராயணகவி எழுதியது :

எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்
எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

உல‌க‌ம் செழிக்க‌ உத‌வும் ப‌ண‌த்தை எங்கே தேடுவேன்
அரசன் முதல் ஆண்டியும் ஆசை படும் இந்த பணத்தை
எங்கே தேடுவேன், பணத்தை எங்கே தேடுவேன்
கருப்பு மார்கெட்டில் கலந்து கொண்டாயோ
கஞ்சன் கைகளில் சிக்கிகொண்டாயோ
கிண்டிரேஸில் சிக்கி கிருகிருத்தாயோ
அண்டின பேர்களை ரெண்டும் செய்யும்
பணத்தை ப‌ண‌த்தை எங்கேதேடுவேண்
எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

பூமிக்குள் புதைந்து புதைய‌லானாயோ......
பொன்ந‌கையாய் பெண்மேல் தொங்குகின்றாயோ
சாமிக‌ள் அடிக‌ளில் ச‌ர‌ண்புகுந்தாயோ
ச‌ன்யாசி கோல‌த்தோடு உல‌வுகின்றாயோ
ப‌ண‌த்தை எங்கே தேடுவேன்
எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

திருப்ப‌தி உண்டிய‌லில் சேர்ந்துவிட்டாயோ
திருவ‌ன்னாம‌லை குகைபுகுந்தாயோ
இரும்பு பெட்டிக‌ளில் இருக்கின்றாயோ
இர‌க்க‌முள்ள‌வ‌ரிட‌ம் இல்ல‌த‌ப‌ண‌மே
உன்னை என்கே தேடுவேன்
தேர்ச‌லில் சேர்ந்து தேய்ந்து போனாயோ
தேக‌ சுக‌த்திற்க்காக‌ ஊட்டி சென்றாயோ

சுவ‌ற்றிக்குள் த‌ங்க‌மாய் ப‌ங்க்குவிட்டாயொ

சூட‌ம் சாம்பிரானியாய் க‌ர‌ந்துவிட்டாயோ

உல‌க‌ம் செழிக்க‌ உத‌வும் ப‌ண‌மே உன்னை எங்கே தேடுவேன்

எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்
எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

Friday, October 3, 2008

இந்திரா காந்தியின் கொடுங்கோலாட்சி (அவசரகாலம் / MISA )

1975 ஜூன் மாதம் 25ஆம் தேதி, இந்திய பிரதமர்
இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்து
நாட்டில் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவ‌குத்தார்.
அனைத்து அடிப்படை உரிமைகளும் ரத்து
செய்யப்பட்டன. எதிர்கட்சிகள் தடை செய்யப்பட்டன ;
தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்ட்டு ,
விசாரணையின்றி சிறையில் தள்ளப்பட்டனர்.
பலரும் தலைமறைவாகினர். பத்திரிக்கைகள்
முடக்கப்பட்டன. கடுமையான தனிக்கை முறை
உருவானது.

இந்த கொடுங்கோலாட்சி 1977வரை தொடர்ந்த
வரலாறு பற்று பலருக்கும் தெரியாது.

http://en.wikipedia.org/wiki/Indian_Emergency

வலது கம்யுனிஸ்ட்கள் அடித்த ஜால்ரா சொல்லி
மாளாது. இந்திராதான் இந்தியா என்று கவியரங்கங்கள்
நடத்தினர்.

இருபது அம்ச திட்டம் என்ற பாடல் சதா வானொலியில் ஒலித்துக்கொண்டிருக்கும்.
ரயில்கள் சரியான நேரத்திற்கு
ஓடின. அரசு ஊழியர்களும் அவர்கள் சங்கங்களும் கப்சிப்.

திரைப்பட தணிக்கை குழு அடித்த லூட்டி மாளாது. மது
குடிப்பது , மற்றும் வன்முறை சண்டைக்காட்சிகள் வெட்டி வீசப்பட்டன.
'கிச்சா குர்சி கா' என்ற திரைப்படம் சஞ்சய்
காந்தி குழுவினரால் நெகடிவ்வோடு எரிக்கப்பட்டது.
பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டன. துக்ளக் போன்ற பத்திரிகைகள் பல
பக்கங்கள் அச்சிடாமலேயே வெளி வந்தன...அவ்வளவு சென்சார்.

புரட்சிகர சிந்தனை கொண்ட மாணவர்கள் வேட்டையாடப் பட்டனர். கேரளாவில் ராஜன்
கொலை வழக்கு பிரசித்தம்
பெற்றது. காவல்துறை எவரையும் பிடித்து சித்திரவதை
செய்யும் அதிகாரம் கொண்டிருந்தது.

பெரும் தலைவர்கள் பலர் தலைமறைவாகவும்
சிறையிலும் காலத்தை கழிக்க வேண்டியிருந்தது.....

அவசர நிலை காலத்தின் பெரும் சக்தியாக சஞ்சய்
காந்தி விளங்கினார். குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை நிறைவேற்றுகிறேன்
என்று சொல்லி குறி வைத்து ஒரு குறிப்பிட்ட பிரிவினரை பிடித்து கட்டாய
கருத்தடை
(நஸ்பந்தி) செய்தார், தில்லி துர்க்மான் கேட் பகுதியில்
இருந்த ஆயிரக்கணக்கான குடிசைகளை புல்டோசர்
கொண்டு இடித்து தள்ளினார்.

கல்லூரி விடுதிகள் கடும் கண்காணிப்புக்கு ஆயின.
Q Branch அதிகாரிகள் எந்த மாணவனையும் பிடித்து
இழுத்து சென்றனர். காங்கிரஸ் மாணவர்கள்
ஆள்காட்டிகளாக திகழ்ந்தனர்.

ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதிகளில் அப்போதைய
ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுக்கு தனி இடம்
உண்டு. அவர் பாத் டப்பில் படுத்துக்கொண்டு
கையெழுத்திடும் அபு அப்ரகாமின் கேலி சித்திரம்
படு பிரசித்தம்.

ஆர்.எஸ்.எஸ். உட்பட பல இயக்கங்கள் தடை
செய்யப்பட்டன.

அரசியலில் அப்போது அதிக ஆர்வம் காட்டாமல்
இருந்த ஜெயபிரகாஷ் நாராயணன் எதிர்ப்பு அலைக்கு
தலைமை தாங்கினார். ஜார்ஜ் பெர்னாண்டஸ்
போன்றவர்களையும் குறிப்பிட்டு சொல்லலாம்.

தி.மு.கவின் களப்பலி சிட்டிபாபு. அப்போது உள்ளே
போனவர்கள் எல்லாம் பின்னர் பெயருடன் 'மிசா' என்ற பட்டத்தையும்
சேர்த்துக்கொண்டனர். கைம்பெண்
மறுவாழ்வு திட்டதிற்க்கு நான் தயார் இந்திரா தயாரா
என கேட்ட ஸ்டாலினின் விலா எலும்பு முறிக்க
பட்ட காலம்.

'Be Indian, Buy Indian' என்ற அரசின் முழக்கத்திற்கு பயந்து அயல்நாட்டு
வாட்ச் கட்டினவன் எல்லாம் அதை அவிழ்த்து பாக்கெட்டில் போட்டு கொண்டு
திரிந்த காலம்.....