Friday, October 3, 2008

இந்திரா காந்தியின் கொடுங்கோலாட்சி (அவசரகாலம் / MISA )

1975 ஜூன் மாதம் 25ஆம் தேதி, இந்திய பிரதமர்
இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்து
நாட்டில் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவ‌குத்தார்.
அனைத்து அடிப்படை உரிமைகளும் ரத்து
செய்யப்பட்டன. எதிர்கட்சிகள் தடை செய்யப்பட்டன ;
தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்ட்டு ,
விசாரணையின்றி சிறையில் தள்ளப்பட்டனர்.
பலரும் தலைமறைவாகினர். பத்திரிக்கைகள்
முடக்கப்பட்டன. கடுமையான தனிக்கை முறை
உருவானது.

இந்த கொடுங்கோலாட்சி 1977வரை தொடர்ந்த
வரலாறு பற்று பலருக்கும் தெரியாது.

http://en.wikipedia.org/wiki/Indian_Emergency

வலது கம்யுனிஸ்ட்கள் அடித்த ஜால்ரா சொல்லி
மாளாது. இந்திராதான் இந்தியா என்று கவியரங்கங்கள்
நடத்தினர்.

இருபது அம்ச திட்டம் என்ற பாடல் சதா வானொலியில் ஒலித்துக்கொண்டிருக்கும்.
ரயில்கள் சரியான நேரத்திற்கு
ஓடின. அரசு ஊழியர்களும் அவர்கள் சங்கங்களும் கப்சிப்.

திரைப்பட தணிக்கை குழு அடித்த லூட்டி மாளாது. மது
குடிப்பது , மற்றும் வன்முறை சண்டைக்காட்சிகள் வெட்டி வீசப்பட்டன.
'கிச்சா குர்சி கா' என்ற திரைப்படம் சஞ்சய்
காந்தி குழுவினரால் நெகடிவ்வோடு எரிக்கப்பட்டது.
பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டன. துக்ளக் போன்ற பத்திரிகைகள் பல
பக்கங்கள் அச்சிடாமலேயே வெளி வந்தன...அவ்வளவு சென்சார்.

புரட்சிகர சிந்தனை கொண்ட மாணவர்கள் வேட்டையாடப் பட்டனர். கேரளாவில் ராஜன்
கொலை வழக்கு பிரசித்தம்
பெற்றது. காவல்துறை எவரையும் பிடித்து சித்திரவதை
செய்யும் அதிகாரம் கொண்டிருந்தது.

பெரும் தலைவர்கள் பலர் தலைமறைவாகவும்
சிறையிலும் காலத்தை கழிக்க வேண்டியிருந்தது.....

அவசர நிலை காலத்தின் பெரும் சக்தியாக சஞ்சய்
காந்தி விளங்கினார். குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை நிறைவேற்றுகிறேன்
என்று சொல்லி குறி வைத்து ஒரு குறிப்பிட்ட பிரிவினரை பிடித்து கட்டாய
கருத்தடை
(நஸ்பந்தி) செய்தார், தில்லி துர்க்மான் கேட் பகுதியில்
இருந்த ஆயிரக்கணக்கான குடிசைகளை புல்டோசர்
கொண்டு இடித்து தள்ளினார்.

கல்லூரி விடுதிகள் கடும் கண்காணிப்புக்கு ஆயின.
Q Branch அதிகாரிகள் எந்த மாணவனையும் பிடித்து
இழுத்து சென்றனர். காங்கிரஸ் மாணவர்கள்
ஆள்காட்டிகளாக திகழ்ந்தனர்.

ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதிகளில் அப்போதைய
ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுக்கு தனி இடம்
உண்டு. அவர் பாத் டப்பில் படுத்துக்கொண்டு
கையெழுத்திடும் அபு அப்ரகாமின் கேலி சித்திரம்
படு பிரசித்தம்.

ஆர்.எஸ்.எஸ். உட்பட பல இயக்கங்கள் தடை
செய்யப்பட்டன.

அரசியலில் அப்போது அதிக ஆர்வம் காட்டாமல்
இருந்த ஜெயபிரகாஷ் நாராயணன் எதிர்ப்பு அலைக்கு
தலைமை தாங்கினார். ஜார்ஜ் பெர்னாண்டஸ்
போன்றவர்களையும் குறிப்பிட்டு சொல்லலாம்.

தி.மு.கவின் களப்பலி சிட்டிபாபு. அப்போது உள்ளே
போனவர்கள் எல்லாம் பின்னர் பெயருடன் 'மிசா' என்ற பட்டத்தையும்
சேர்த்துக்கொண்டனர். கைம்பெண்
மறுவாழ்வு திட்டதிற்க்கு நான் தயார் இந்திரா தயாரா
என கேட்ட ஸ்டாலினின் விலா எலும்பு முறிக்க
பட்ட காலம்.

'Be Indian, Buy Indian' என்ற அரசின் முழக்கத்திற்கு பயந்து அயல்நாட்டு
வாட்ச் கட்டினவன் எல்லாம் அதை அவிழ்த்து பாக்கெட்டில் போட்டு கொண்டு
திரிந்த காலம்.....

2 comments:

  1. http://venus.unive.it/asiamed/eventi/schede/emergency.html

    .....But in reality, how did this economic package work out for the Indian poor? Land reforms and minimum wages remained a distant dream for the rural labourers. The rich village landlords could not be forced to part with the excess land that they held illegally for distribution among the landless, and pay the wages officially fixed for their agricultural labourers – since they were the main pillars of Mrs Gandhi’s Congress party, her prime constituency in rural India. Even those few who were freed from bonded labour, came out to find that no means were provided to them by the government to enable them to earn a living. They again reverted to the old practice of taking loans from landlords and money-lenders in order to survive – and got entangled in the same bondage being unable to pay off their debts. In the urban areas, rising prices affected the common citizens, and workers often resorted to strikes facing the risk of loss of jobs and imprisonment. The promise of jobs for the unemployed youth also turned out to be false. By October 1975, registered job seekers among the educated had climbed to 4.1 million. Twenty four percent of the urban youth remained unemployed. The twenty-point programme thus cut nowhere near deep enough to solve the manifest problems of the country – whether in the villages or cities. ////

    ReplyDelete
  2. இன்றுதான் படித்தேன்.

    ReplyDelete