Monday, September 29, 2008

இஃப்தார் விருந்தும், அரசியல்வாதிகளும்

ரம்லான் நோன்பை தினமும் முடிக்க சாய்ங்கால வேளையில் இஸ்லாமிய அன்பர்கள்
நோன்பு கஞ்சி குடித்து முடிப்பது வழக்கம். சூரியோதயத்திற்க்கு முன்பு
துவங்கும் இந்த விரதம், மாலை வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட பருக கூடாது
என்பது விதி.
என‌து இஸ்லாமிய‌ ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் எச்சிலைக் கூட‌ விழுங்காம‌ல் துப்பிவிடுவார்.

விர‌த‌ம் ஜீரண‌ உருப்புக‌ளுக்கு ஓய்வு அளிப்ப‌த‌ற்க்காக‌ அனைத்து
ம‌த‌ங்க‌ளிலும் எதோ ஒரு பாணியில் உருவாக்க‌ப்ப‌ட்ட‌து. இஸ்லாமிய‌
ர‌ம‌லான் நோன்பு ஒரு மாத‌ம் வ‌ரை தின‌மும் க‌டைபிடிக்க‌ப் ப‌டுகிற‌து.
ஏழைகள், பட்டினியால் கஸ்டப்படுவதை அனைவரும் அனுபவத்தில் உணர்ச் செயவதும்
ஒரு நோக்கம் என்று அந்த நண்பர் கூறினார்.

கடந்த 25 ஆண்டுகளில் இந்த இஃப்தார் விருந்தில் அரசியல் புகுந்து விட்டது.
பெரும் பாலான அரசியல் கட்சி தலைவர்கள், இதில் கலந்து கொண்டு மத
நல்லினக்தையும் அப்படியே இஸ்லாமிய ஓட்டு வங்கிகளையும் வளர்க்க ஒரு
ஸ்டண்ட் இது. பெரிய தவறில்லை இது.

எமது கேள்வி : கடும் விரதம் இருக்கும் இஸ்லாமிய நண்பர்கள் விரதம் முடிக்க
நோன்பு கஞ்சி அருந்துவது சரி. ஆனால் காலை, மதியம் மூக்கு பிடிக்க
சாப்பிட்டு, பிறகு பீடா போட்டுக்கொண்ட அரசியல் தலைவர்கள், மாலையில் இந்த
விருந்தில் கலந்து, உண்மையில் நோன்பு இருப்பவர்க்ளோடு சேர்ந்து கஞ்சி
குடிப்பது தமாஸா இல்லை ?

இது ப‌ற்றி என்ன‌ சொல்வ‌து ?

1 comment:

  1. DEAR ATHIYAMAN,
    I HAVE ADDED YOUR POST IN MY BLOG
    TO WHICH I AGREE WHOLEHEARTEDLY.

    Tuesday, September 30, 2008
    கூத்தோ கூத்து.!! அழுவதா? சிரிப்பதா ? விஜயகாந்துக்கு `விஜய்கான்'

    http://vanjoor-vanjoor.blogspot.com/

    THANK YOU FOR YOUR POST.

    REGARDS.
    VANJOOR

    ReplyDelete