Tuesday, May 20, 2008

எனக்கு மிகவும் பிடித்த பகவத் கீதை வரிகள்

எனக்கு மிகவும் பிடித்த பகவத் கீதை வரிகள் :

உயிர் அனைத்திடத்தும் வெறுப்பின்றி, நட்பும் கருணையும்
உடையவனாய், மமகாரம் அகங்காரம் அற்று, இனப
துன்பங்களைச் சமமாய்க் கருதி, பொறுமை படைத்து,
எப்போதும் சந்தோஷமாயிருப்பவன், யோகியாய்,
தன்னடக்கமுடையவனாய், திடநிச்சயமுள்ளவனாய்,
என்னிடத்து மனம் புத்தியை சமர்ப்பித்தவனாய்,
யார் என் பக்தனாகிறானோ, அவன் எனக்கு
பிரியமானவன். (அத் - 12 / ஸ்லோகம் 13 - 14)

பைபிலில் பிடித்தது :

Wisdom resideth in the heart, that hath understanding. (Proverbs)
Do not judge them, for they do not understand.

பிடித்த அரபிய பழமொழி :

அல்லாவை கும்பிடு , அனால் ஒட்டகத்தை கட்டிப்போடு.


பிடித்த திருக்குறள்கள் :

ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்காப்
பேதையின் பேதையார் இல். (என்க்கு மிக பொருந்துகிறது !!)

தெய்வதான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்(து)
அதனை அவன்கண் விடல் (management thru delegation !!)

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப் தறிவு.

No comments:

Post a Comment