Wednesday, February 11, 2009

ஈழத்தமிழர்கள் பற்றி...

ஈழதமிழர்கள் பற்றி :

சிங்களர்கள் கடந்த 60 ஆண்டுகளாக ஈழத்தமிழர் உரிமைகளை பறித்து, பல
வன்கொடுமைகளை புரிவது தெரிந்த விசியம்தான். 1948இல் இலங்கை,
ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை அடைந்தது. இந்தியாவில் பார்பனர்களின் ஆதிக்கம்
(கல்வி, அரசு பதவிகள், நீதித்துறை, மற்றும் பல இதர துறைகளில்) எவ்வாறு 60 ஆண்டுகளுக்கு
முன் இருந்ததோ, அதே போல, ஏறக்குறைய அதே அளவில், இலங்கையில் யாழ்பாணத் தமிழர்கள்
ஆதிக்கம் இருந்தது. சிங்களர்களை விட கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் தமிழர்கள் மிக அதிக
அளவில் இருந்தனர். இதுதான் இலங்கை பிரச்சனையின் மூலம்.
 
இந்தியாவில், ஜனனாயக முறையில் பார்பனீயம் மற்றும் சாதியம் எதிர்கொள்ளப்பட்டது. இட
ஒதுக்கீடு மற்றும் இலவச கல்வி முறைகள் முக்கிய ஆயுதங்களாக, ஜனனாயக முறையில்
உபயோகிக்க்ப்பட்டன். ஆனால் இலங்கையில் சிங்களர்கள் சார்பில், இனவாதம் தூண்டப்பட்டு,
படிப்படியாக தமிழர்கள் உரிமைகள், சர்வாதிகார முறையில் நசுக்கப்பட்டன். சிங்களர் உரிமைகளை
நிலை நாட்ட ஜனனாயகமல்லாத ய்தேச்சாரிகாத முறைகள் கடைபிடிக்கப்பட்டன. பல ஆண்டுகள்
ஈழத்தந்தை 'செல்வா' அவர்கள் தலைமையில் ஜன்னாயக முறையில் போராடி தோற்ற தமிழர்கள்,
கடைசியில் 70களில் ஆயுதப் போருக்கு முணைந்தனர்.
ஈழத்தமிழர்களில் சாதிய உணார்வு அதிகம்தான். வேளாளர்கள் (சைவப் பிள்ளைமார்) ஆதிக்கம்
அதிகம்.  கருணா ஒரு தாழ்ந்த (ஓடக்கார சாதி) ; அதன் தாக்கமும் அவரின் செயல்களுக்கு ஒரு
மறைமுக காரணி.
 
தென் இலங்கையில் உள்ள ரப்பர் மற்றும் டீ / காப்பி எஸ்டேட்களில் கூலி வெலை செய்ய
பல லச்சம் தமிழக மக்கள் 19ஆம் நூற்றாணிடிலும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பங்களை வரை,
புலம் பெயர்ந்தனர். இன்றும் அம்மக்களின் வம்சா வழியினர், கண்டி பகுதிகளிலும், அதன் இணை
பகுதிகளிலும் வாழ்கின்றனர். அவர்கள் என்ற கட்சியை தம் உரிமைகளுக்கு போரட துவங்கினர்.
அவர்களின் முக்கிய தலைவர் மறைந்த திரு.தொண்டைமான் அவர்கள். இந்த தோட்ட
தொழிலாளர் தமிழர்களை , வடக்கில் வாழும் ஈழத்தமிழர்கள் மதிப்பதில்லை. இவர்களின்
உரிமைகள் நசுக்கப்பட்ட போது, அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அதே போல்,
தோட்ட தொழிலாள்த்தமிழர்ககளும் யாழ்பாணத் தமிழர்களின் பிரச்சனைக்காக பெரிதாக
அலட்டிக்கொள்வதில்லை. இரு குழுக்கலும் வேறு வேறு என்னும் அடிப்படை உண்மை,
தமிழ்னாட்டு தமிழர்களாகிய நமக்கும் தெரிவதில்லை.
 
 
 
1948இல் தோட்டத்தொழிளார்களின் வாக்குரிமை மற்றும் குடியுரிமை பறிக்கப்பட்ட
போது, யாழ்பாணத்தமிர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. தமிழகத்தில் எழுந்த
எதிர்ப்பு தான் அதிகம்.
 
சிங்களர்களின் வன்கொடுமைகளை இந்த பதிவின் மூலம் நியாயப்படுத்துவதாக தயவு
செய்து யாரும் முடிவு செய்துவிட வேண்டாம். இந்த பதிவுன் நோக்கம் :

"Truth is not  as simple as it appears"