Monday, September 22, 2008

பாரதியின் 'ஆரியர்' பற்றிய கருத்துக்கள் - ஒரு விவாதம்

பாரதியின் 'ஆரியர்' பற்றிய கருத்துக்கள் அன்றைய
காலகட்டத்தை வைத்துத்தான் எடை போட வேண்டும்.
ஆரியன் என்றால் யாரை எதை குறிப்பிடுகிறார் ?
திராவிடன் எனற பிரோயகம் இல்லையே ? அப்ப
ஆரியர் என்றால் பார்பனர் என்று அர்த்ததில்
பிர்யோகித்தாரா அல்லது பொதுவாக இந்தியர்களை
குறிக்க அந்த சொல்லா ? அன்று ஆரியன் என்ற சொல் 'பொலிடிக்கலி அன்கரக்க்ட்'
ஆகாமல் சகஜமாக
இருந்த்து.

பார்பனர்களின் இயல்புகளையும் அவர் கண்டித்துள்ளார்.
அதனால் பார்பனியவாதி அவர் என்று முடிவு கட்டுவது
சரியல்ல. ஜாதி பேதங்களை வெறுத்தவர். தாழ்தப்பட்ட
மக்களிடம் அன்பு கொண்டவர்.

அவரிடம் நெருங்கி பழகி, அவரின் அனைத்து
எழுத்துக்களையும் படித்தவர் பாரதிதாசன் எனப்படும் கனகசுப்புரத்தினம்.
புரட்சி கவிஞர் என்று
பகுத்தறிவாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் அவர்
ஏன் தன் பெயரை 'பாரதிதாசன்' என்று மாற்றிக்
கொண்டார் ? அவர் பாரதியோடு நெறுங்கி பழகியவர்.
பாரதியின் உண்மையான குண நலன்களை உணர்ந்தவர். பாரதியின் நல்லியல்புகள்,
சாதி மதம் கடந்த பார்வைகள்
மற்றும் அன்பை புரிந்தவர் / நேரில அறிந்தவர்.
அதனால்தாம் தம்மை பாரதிதாசன் என்று அழைத்துக்
கொண்டார். அவரின் பார்வையில் பாரதி ஒரு பார்பனவாதியாகவோ, இந்துத்துவவாதியாக
தோன்றவில்லையே ? ஏன் ?

ஒரு மனிதனை முழ்மையாக புரிந்து கொள்ள
அவனின் முழு வாழ்வையும் பார்க்க
வேண்டும் என்பதே சரி..

////////செந்தமிழ் நாடெனும் போதினிலே யின்பத்
தேன்வந்து பாயுது காதினிலே என்றெழுதித்
தமிழ்நாட்டை அப்படியே நெஞ்சால் எழுதி
முடித்தார்" (8)

என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூறுகிறார். இவ்வாறாகப்
பாரதி நண்பர்களுடைய வேண்டுதலாலும், கட்டாயத்தாலும் தான், "செந்தமிழ்
நாடெனும் போதினிலே" என்ற பாடலையும், "யாமறிந்த மொழிகளிலே" என்ற பாடலையும்
எழுதினார். இந்தப் பாடல்களுக்காக அவருக்கு மதுரைத்
தமிழ்ச் சங்கம் பரிசாக
ரூ.100 அளித்தது. (9////////

so ? எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக்
கொள்ளாலாம். (interpretation)

உள்ளதில் மெய் உணர்வு இல்லாமல் ஆழமான,
உணார்சிகரமான கவிதைகளை, பிறர் சொல்கிறார்கள
என்று எழுத முடியாது. எழுதுனாலும் குற்ற‌ம் /
எழுதாவிட்டாலும் குற்ற‌ம். வேடிக்கை..

//இதுகுறித்து ஆய்வாளர் க.கைலாசபதி கூறுவதாவது:

"1949 இல் ஓமந்தூரார் அரசு பாரதி நூல்களின் பதிப்பு
உரிமையை வாங்கியது. 1950 இல் அரசு பாரதி நூல்கள்
பதிப்புக் குழு ஒன்றை உருவாக்கியது. அக்குழுவில் இருந்த
ரா.பி.சேதுப்பிள்ளை, மு.வரதராசனார் போன்றோர்
பாரதியின் கவிதைகளில் மூலப்படியில் இருந்த
கிரந்த எழுத்துக்களை முழுமையாக நீக்கிவிட்டதாகவும்,
1909 இல் வெளிவந்த ஜன்மபூமியில் ஸமர்ப்பணம்
முகவுரை ஆகியவற்றின் கீழ் ஸி.ஸுப்பிரமணிய பாரதி
என்றே கையொப்பமிட்டுள்ளார்" (20) என்றும் ஆய்வாளர் க.கைலாசபதி கூறியுள்ளார்.
/////

இருக்கலாம். 100 ஆண்டுகளுக்கு முன் மணிபிரவள
நடைதான் சாதரணமாக இருந்த்து. அந்த காலத்தில் தூய
தழில் இயக்கம் வளர்வில்லை. சம்ஸ்கிருதம் பற்றிய
இன்றைய அரசியல் எதிர்ப்போ, சமஸ்கிருதம்
பார்பனியத்தின் ஆதிக்க மொழி என்ற கருத்தோ
பொதுபுத்தியில் பரவாத காலம் அது.

அன்று தமிழ் கவிதை என்றாலே யாப்பு / செய்யுள் தாம்.புதுக்கவிதையே இல்லை.
இன்று எழுதுவது சுலபம்.

எளிய தமிழ் கவிதைகளின் முன்னேடி பாரதி.
முழ்வதுமாக சமஸ்கிருதம் கலக்காமல் எழுத வேண்டும் ;
அப்படி எழுதுவதுதான் சரியானது என்ற கருத்து அன்று
இல்லை. அப்படி இருந்தாலும் பாரதி வளர்ந்த /வாழ்ந்த
காலச்சூழ் நிலையை பாருங்கள். பார்பனராக பிறந்து,
காசியில் படித்து, சம்ஸ்கிருதம், ஹிந்தி மொழிகளில் இலக்கியங்களில் நல்ல
தேர்ச்சி பெற்ற அவர், தமிழில்
இந்த அளவு அன்றைய காலகட்டத்தில் எழுதியதே
பெரிய விசியம். மணிபிரவாள தமிழ் சூழ்னிலை அன்று.
பாரதி தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டையும் உயர்வாக
கருதியவன். (பார்பானியவாதமாக அல்ல) ; சம்ஸ்கிருதத்தில்
பல அரிய காப்பியங்களை படித்து திளைத்தார் / மகிழ்ந்தார். தமிழிலும்தான்.
அவனை பொருத்தவரை பேதம், ஏற்ற
தாழ்வு இல்லை.

குழந்தை உள்ளம் கொண்டவன் பாரதி.

//வேத உபநிடத மெய்நூல்களெல்லாம் போய்ப்
பேதக் கதைகள் பிதற்றுவாரிந் நாட்டினிலே" (2)

எனக் கூறி, இங்கு "ஆரியர்கள் வாழ்ந்த நாடு அற்புத
நாடென்றும், அவர் எழுதிய வேத உபநிடதங்களெல்லாம்
மறைந்து போயினவே" என்றும் மிகவும்
வருத்தப்படுகிறார்.

///

வருத்தபடுவது அதற்காக அல்ல.
"பேதக் கதைகள் பிதற்றுவாரிந் நாட்டினிலே" :
இதற்க்காகத்தான்.

அதாவது பல ஜாதி. இன, மத, பிரிவுகளை அதற்கான கதைகளைதான் இன்று மக்கள்
முன்னிருத்தி பேதம்
கற்பித்து பிரிந்து வாழ்கின்றனர் என்றா வருத்தம்.

மனுதர்மம் பின்னர் வந்த சதி. உபனிடங்களில் உள்ள
தத்துவங்கள், மனுதர்மம் போன்ற அநியாயமான,
(பிறப்பிலேயே ஏற்ற தாழ்வு கற்பிக்க்கும்), ஆணாதிக்க
கருத்துக்கள் அல்ல. அதைதாம் பாரதி குறிப்பிடுகிறான். ஒழுக்கத்தால் தான்
ஒருவன் உண்மையான பிரமணனாக முடியும் ; பிறப்பால் அல்ல என்பதை உபனிடம் /
கீதை வலியிருத்துகிறது. அதை பாரதியும்
எடுத்துரைக்கின்றான். இந்து மத கருத்துக்கள் பற்றி
பாரதியின் பார்வை வேறு ; ஆர்.எஸ்.எஸ் பார்பனர்களின்
பார்வை வேறு.

2 comments:

  1. நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கின்றன...
    சரி செய்யலாமே...

    ReplyDelete
  2. surely bharathi 'd written the song with much patriotic in tamil.i can refer one more incident to prove this.once bharathi was written a letter to gandhi in english and he said "we wont hurt/condemn others using tamil" tamil aringargal sarttru sinthika..

    ReplyDelete