Sunday, March 8, 2009

ஒரு கலக்டெரும், ஒரு தேர்தல் அதிகாரியும்

ஒரு கலக்டெரும், ஒரு தேர்தல் அதிகாரியும்

ஒரிஸா மாநிலத்தில் ஒரு மாவட்ட கலெக்டராக எம் நண்பர் பணி புரிகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு இடை தேர்தல் அவர் மாவட்டத்தில் நடக்க
இருந்தது. மத்திய தேர்தல் கமிஸன் ஒரு தேர்தல் கண்கானிப்பாளரை
(observer) அணுப்பியது. அவர் ஒரு பெரிய பந்தா மற்றும் டார்ச்சர் பேர்வழி
என்று அறிந்த எம் நண்பர் , முன் கூடியே சில 'ஏற்பாடுகளை' செய்தார்.

சாதாரணமாக எலெக்கஸன் கமிஸன் விதிகள் அனைத்தையும் 100 சதம்
ஒரு தொகுதியில் அமல்படுத்துவது இயலாத காரியம். அரசு எந்திரத்தையும்
மீறு சில தவறுகள் நடக்கும்தான். அதை வேண்டுமென்றே பெரிது படுத்தி,
மிரட்டி பல 'சலுகைகளை' பெறும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் உண்டு.
வருபவர் அப்படி பட்டவர். அதற்க்கு மேல் ஆணவமான பேர்வழியும் கூட.

புவனேஸ்வர் விமான நிலையத்தில் அவர் இறங்கியவுடன் அவருக்கு
விஷேச வரவேற்ப்பு. ஆயுதப்ப்டை போலிஸார் சுமார் 30 பேர்களுக்கு
மேல் அவருக்கு பாதுகாப்பு. எஸ்கார்ட் வண்டிகள் ஒரு 4 வாகனங்கள்.
நண்பரின் மாவாட்டத் தலைநகர் சுமார் 180 கி.மிகள். பல இடங்களில்
லோக்கல் போலிஸார் பாதுகாப்பாக வந்தனர். ஆனால் யாரும் வந்த‌
அதிகாரியிடம் எதுவும் சொல்லவில்லை.

பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்த்து அதிகாரி மிரண்டுவிட்டார். எதோ,
தீவிரவாதிகள் அல்லது வன்முறை அதிகம் உள்ள பகுதி என்று
நினைத்து விட்டார். அவர் அப்படி நினைக்கவெ இந்த செட்டப்.
நம் நண்பர் குயுக்த்தி மூளை உடையவர். சகுனிக்கே பாடம்
சொல்லித்தரும் திறமை உடைய்வர்.

வாகனங்கள் அரசு விருந்தினர் மாளிகை அடைந்தது பின், சுற்றி
பல டஸன் ஆயுதப் போலிஸார் காவல். செம பில்டப். ஆனால்
யாரும் அவரிடம் நேரில் எதுவும் சொல்லவில்லை. மிகவும் பயந்து
போன் அந்த டார்ச்சர் அதிகாரி, இரண்டு நாளும் அறையை விட்டு
வெளியெ போகாமலே, தனது ரிப்போர்ட்டில் அனைத்தும் சரியாக
உள்ளது என்று எழுதி தேர்தல் ஆணையத்திற்க்கு
சமர்பித்தார். சத்தமில்லாமல் வந்த வழியே திரும்பினார்.

இது எப்படி இருக்கு ? :))

வ‌ல்லவ‌னுக்கு வ‌ல்ல‌வ‌ன் நாட்டில் உண்டுதான்.

No comments:

Post a Comment